• Sep 20 2024

பாடகர் கே.கே-இன் இறுதி சடங்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் முதல்வர் தெரிவிப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் மிக பிரபல பின்னணி பாடகராக வலம்வருபவர் நம்ம கே கே. கேரளாவை பூர்விகமாக கொண்ட கே கே சிறுவயதிலேயே பெற்றோருடன் மேற்கு வங்கத்தில் குடியேறினார்.இந்நிலையில் பாடகர் கே கே (மே 31) நேற்று காலமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி, மராத்தி,குஜராத்தி, மலையாளம் என பல மொழிகளிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இவருடைய அகால மரணம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொல்கத்தாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் நோய் வாய்ப்பட்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் தனது ஹோட்டலுக்குச் சென்ற கே கேவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி, யூனியன் மினிஸ்டர் என பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அவரது மறைவுக்கான இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாடகர் கே கே -இன்உடலுக்கு மேற்கு வங்க விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதையை செய்யப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement