• May 20 2024

ஜீவானந்தத்தின் பதிலால் அதிர்ச்சியில் நந்தினி... கரிகாலனை திட்டித் தீர்க்கும் ஆதிரை... விசாலாட்சிக்கு குணசேகரன் கொடுத்த ஷாக்... விறுவிறுப்பான 'Ethirneechal' Episode..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் நேற்றைய தினம் என்ன நடந்துள்ளது என்பது குறித்துப் பார்ப்போம். அந்தவகையில் வெண்பாவை பார்த்த நந்தினி அவளைக் கட்டியணைத்துக் கதறி அழுகிறாள். பின்னர் ஜீவானந்தத்தைக் கண்டதும் அவரிடம் மன்னிப்பு கேட்கிறார் நந்தினி. மேலும் ஜனனி "நீங்க அப்பத்தாவுக்கு உதவி செய்ய போய் உங்களுக்கு இப்படி ஆயிடுச்சு இல்ல அது தான் ஃபீல் பண்ணி அழறாங்க" என ஜீவானந்தத்திடம் கூறுகின்றார்.


பதிலுக்கு ஜீவானந்தம் "அப்பத்தாவுக்கு உதவி பண்ணது வேற, என்னோட மனைவியை கொலை பண்ணவங்க வேற. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?" என சொல்லி அனைவரையும் உள்ளே கூட்டி செல்கின்றார். பின்னர் அப்பத்தா இப்போது இங்கே இல்லை. ஆனால் அவர் அடுத்து வரும்போது மிகவும் உறுதியாக தான் வருவார் எனவும், அவர் எடுக்கப் போகும் முடிவு பற்றியும் ஜீவானந்தம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

மறுபுறம் ஆதிரையிடம் கரிகாலன் ஹனிமூன் போவது பற்றி பேசி ஆதிரையை கடுப்பேத்துகிறார். பதிலுக்கு ஆதிரை கரிகாலனிடம் சண்டை போடுகின்றார். உடனே விசாலாட்சி "முதலில் மரியாதை இல்லாமல் பேசுவதை நிறுத்து" என ஆதிரையை கண்டிக்கின்றார். கரிகாலன் விசாலாட்சிக்கு நன்றி சொல்கிறார். 


அந்த சமயத்தில் கீழே வந்த குணசேகரன் "என்ன ஒரே சத்தமா இருக்கு?, இந்த வீட்டு பொம்பளைங்களோட சேர்ந்துக்கிட்டு என்னை எதிர்த்து ஒரு அடி எடுத்து வைக்கலாம் என நெனச்சா அப்புறம் உனக்கு பொண்ணு இருக்க மாட்டா. சொல்லி வை" என விசாலாட்சியிடம் கூறிவிட்டு செல்கின்றார். 

இன்னொருபுறம் நந்தினி ஜீவானந்தத்திடம் "நீங்க இவ்வளவு அமைதியானவரா இருக்கீங்க பிறகு எதற்கு துப்பாக்கி எல்லாம் வைத்து இருக்கீங்க?" என கேட்கின்றார். பதிலுக்கு ஜீவானந்தம் "நான் பிரச்சனையின் போது சமாளிப்பதற்காகவும், கூட்டத்தை அடக்கவும் வைத்து இருப்பேன் அதனால் யாருக்கும் எந்த ஒரு துன்புறுத்தலும் இருக்காது. ஒரு போராளி கையில் துப்பாக்கி இருப்பதற்கும் ஒரு சமூக விரோதியிடம் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது " என சாதுரியமாக கூறுகின்றார்.

பின்னர் நந்தினி "அப்போ உங்க மனைவியை சுட்டது யார் என உங்களுக்கு தெரிந்தால் நீங்க என்ன பண்ணுவீங்க?" என கேட்கிறார். அதற்கு ஜீவானந்தம் "கண்டிப்பா கொன்றுவேன்" என்கிறார். அதை கேட்டு நந்தினி அதிர்ச்சி அடைகின்றார். அந்த சமயத்தில் நந்தினிக்கு கால் வருகின்றது, அவளுடைய அப்பா வீட்டுக்கு வந்து இருப்பதாக கூற வீட்டுக்கு வெளியே இருப்பதாக சொல்லிவிட்டு நந்தினி நான் உடனே வருகிறேன் எனக் கூறி ரேணுகாவுடன் விரைந்து செல்கின்றார்.


பின்னர் ஈஸ்வரியும் ஜனனியும் வெண்பாவோடு பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது வெண்பா ஈஸ்வரியை பார்த்து "நீங்க என்னோட அம்மா மாதிரியே இருக்குறீங்க" என சொலல் உடனே ஈஸ்வரி வெண்பாவை கட்டி அணைத்து அழுகின்றார். அப்போது ஜீவானந்தம் ஜனனிக்கும்  ஈஸ்வரிக்கும் காபி கொடுக்கிறார். 

இதனைத் தொடர்ந்து ஜனனி வெண்பாவை அழைத்துக்கொண்டு வீட்டை சுத்திகாட்ட சொல்கிறார். பின்னர் ஜீவானந்தம் ஈஸ்வரியிடம் "என்னுடைய மனைவி கயல்விழி இப்போது இருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பாள். அவளுக்கு உங்களை போல மனிதர்களை சந்திப்பது மிகவும் பிடிக்கும். வெண்பாவையும் கயல்விழியையும் பாதுகாப்பாக வைத்து இருக்கிறேன் என நினைத்து காட்டுக்குள் வைத்தே இருந்து இப்போது இழந்து விட்டேன்" எனக் கூறி வருந்துகின்றார். 

இதனையடுத்து அப்பத்தா பற்றியும் ஜீவானந்தம் ஒரு சில வார்த்தைகள் கூறுகின்றார். சிறிது நேரத்தின் பின் ஈஸ்வரியும் ஜனனியும் அங்கிருந்து கிளம்புகிறார்கள். இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement