• May 21 2024

இனியாவுக்கு கன்டிஷன் போட்டு அடக்க நினைக்கும் ராதிகா- திருதிருவென முழிக்கும் கோபி- நக்கலாக சிரிக்கும் பாக்கியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

 அதாவது வீட்டுக்கு வந்த ராதிகா இனியாவை இன்னும் காணவில்லை என்றும் சொல்லி இனியாவுக்காக காத்திருக்கின்றார். பின்னர் இனியா வீட்டுக்கு வந்ததும் நீ சைக்கிளில் போகக் கூடாது. நீ சைக்கிள்ல போறது ஊர் சுத்த தானே என்று தேவையில்லாமல் கதைக்கின்றார். அத்தோடு இனிமேல் இனியா ஆட்டோல தான் போகனும் என்றும் கண்டிஷன் போடுகின்றார்.


பின்னர் பாக்கியா அமிர்தா, எழில் , ஜெனி, செல்வி எல்லோரும் சேர்ந்திருந்து கதைக்க பழனி போன் செய்து கேக் செய்வது எப்படி என்றும் திரும்பவும் சொல்லிக் கொடுக்கின்றார். அதனைக் கேட்டு பாக்கியாவும் கேக்கை செய்கின்றார். கேக் மிகவும் சூப்பராக வந்து விடுகின்றது. அந்த கேக்கை எல்லோரும் சாப்பிட்டு பார்த்து குஷியடைகின்றனர்


பின்னர் காண்டினில் பாக்கியா பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வரும ராதிகா கேக் செய்ய பழகியாச்சா, இரண்டு குழும்பு வைக்கத் தெரிஞ்சா மட்டும் கண்டீன் நடத்த முடியாது. நாளைக்கு மட்டும் தான் டைம் கேக் சரியாக செய்யல என்றால் கண்டீன் ஆடரையே கான்ஷல் செய்திடுவேன் என்கிறார். இதற்கு பாக்கியாவும் கேக் செய்ய இன்னும் பழகாதது போல ராதிகாவிடம் நடிக்கிறார்.


நான் முயற்சி செய்து பார்த்தும் கேக் செய்வது எப்படி என்று தெரியல மேடம் இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க என்று நெக்கலாக சொல்ல ராதிகா பாக்கியா இன்னும் கேக் செய்ய பழகல என்று நினைத்து அங்கிருந்து கிளம்புகின்றார். பின்னர் செல்வியும் பாக்கியாவும் சிரிக்கின்றனர். தொடர்ந்து டியூஷனில் பழனி டெலிபோன் பேசிக் கொண்டிருக்கும் போது பாக்கியாவும் சென்று விட கேக் பற்றி விசாரிக்கிறார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவுக்கு வருகின்றது.

Advertisement

Advertisement