• Apr 26 2024

மழையில் நனைந்த ரச்சிதா... உடனே குடையுடன் வந்த மாஸ்டர்... இவங்களுக்குள்ள என்ன நடக்குதென்றே புரியலயே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. 21 பேருடன் அமோகமாக ஆரம்பமான நிலையில் சாந்தி, ஜிபி முத்து, அசல் ஆகியோர் இந்தப் போட்டியிலிருந்து வெளியேறி விட்டார்கள். மீதமாக இருப்பது 18 பேர் மட்டுமே. 

இவர்களுக்கு இடையில் சண்டை, கோபம், அழுகை என அனைத்து விதமான உணர்ச்சிகளும் நாளுக்கு நாள் வெளிப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றது.

அதேபோன்று மறுபுறம் காதல் லீலைகளும், ரொமாண்டிக் பார்வைகளும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதாவது ரொபேர்ட் மாஸ்டர் ரச்சிதாவின் காதல் பார்வைகளுக்கு எல்லையே இல்லாமல் இருக்கின்றது.


அதாவது நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்தே ரொபேர்ட் மாஸ்டருக்கு ரச்சிதா மீது ஒரு க்ரஷ் இருக்கிறது. இதனால் காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் குறும்புத்தனமான சேட்டைகளுக்கு அளவே இல்லை. அதனை வீடியோவாக எடுத்து ரசிகர்கள் எடிட் செய்து வைரலாக்கியும் வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ரொபேர்ட் மாஸ்டர், ரச்சிதா குறித்த மற்றோரு காட்சி வெளியாகி இருக்கின்றது. அதாவது மழை பெய்து கொண்டிருக்கும் பொது கார்டன் ஏரியாவின் தரையில் ஆனந்தமாகப் படுத்துக் கொண்டு அந்த மழையில் நனைத்து கொண்டிருக்கிறார் ரச்சிதா. 


அப்போது அங்கு குடையுடன் வந்த ரொபேர்ட் மாஸ்டர், உனக்கு உடம்பு சரியில்லை, நான் சொல்றதை கேளு, சீரியஸா சொல்றேன் எழுந்து வா என ரச்சிதாவை கெஞ்சி கெஞ்சிக் அழைக்கிறார்.


இதற்கு உடனே ரச்சிதா இன்னும் 5 நிமிஷம் என்று சொல்ல, இப்படி சொல்லி சொல்லி அரைமணி நேரம் ஆகிவிட்டது எழுந்து வரியா இல்லையா என அதட்டல் போட்டு செல்லமாக அழைக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்னடா நடக்குது பிக்பாஸ் வீட்டுக்குள்ள என சமூக வலைத்தளங்களின் வாயிலாக கேட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement