• Sep 20 2024

பூர்ணிமா - மாயா இடையே முற்றிய வாக்குவாதம்! பிக்பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேறிய போட்டியாளர்!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில்  தற்போது போட்டிகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் போட்டியாளர்கள் இடையிலும்  கடுமையாக போட்டி நிலவுகின்றது

இந்நிலையில் இன்றைய தினம் வெளியான புரோமோவில், பூர்ணிமா மற்றும் மாயா இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அதிரடியாக செல்கிறார் மாயா.

அதன்படி, பிக்பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்குள் நடந்த கேம்மில் ஸ்மால் பாஸ் வீட்டை சேர்ந்தவர்கள் வெற்றிபெறுகிறார்கள். இதையடுத்து, பிக்பாஸ் வீட்டை சேர்ந்தவர்களுக்கு இனி சாப்பாடு இல்லை  என பிக்பாஸ் அறிவித்தார். 


அதேவேளை, பிக்பாஸ் வீட்டில் இணை பிரியா தோழிகளான பூர்ணிமா மற்றும் மாயா இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. அதன்பின் 'எனக்கு பசிக்குது சாப்பாடு வேணும்' என கூறுகிறார் மாயா. மேலும், 'நான் அங்க வந்தா உங்களுக்கு ஓகேவா' என ஸ்மால் பாஸ் வீட்டினரை பார்த்து மாயா கேட்க, 'வாங்க பார்த்துக்கலாம்' என நிக்சன் கூறுகிறார்.

இதைப் பார்த்து பொங்கியெழுந்த பூர்ணிமா கேள்வி எழுப்ப, இருவர் இடையே வாக்குவாதம் முத்த, 'நான் என்னை பார்த்துக்கொள்ள தான் இங்க வந்துருக்கேன், உங்கள பாத்துக்குறது என் வேலை இல்லை என மூஞ்சில்' அடித்தது போல் கூறுகிறார் மாயா. 

இதேவேளை, எனக்கு சோறு தான் முக்கியம் என ஸ்மால் பாஸ் வீட்டிற்கு மாயா தாவி உள்ளதால் வேறு ஏதாவது பிரச்சனை வெடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement