• Sep 20 2024

பாக்கியலட்சுமி சீரியலுக்கு சீக்கிரம் எண்ட் கார்டா? குமுறும் ரசிகர்கள்! காரணம் என்ன தெரியுமா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. ஆரம்பத்தில் விறுவிறுப்பான கதை களத்துடன் ஒளிபரப்பாகி வந்த சீரியலை தற்போது ஜவ்வு போல் இழுத்து வருகின்றனர் என நேயர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, கோபி - ராதிகா விஷயம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கதையே இல்லாமல் செழியனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு காணப்படுகிறது. அதேபோல் அமிர்தாவின் செத்து போன கணவர் மீண்டும் என்ட்ரி கொடுக்கின்றார் என தொடர்ந்து தடம் மாறி பயணித்து வருகிறது பாக்கியலட்சுமி.


ஏற்கனவே, பாக்கியா வீட்டில் முக்குடைந்து சென்ற ராதிகா, மீண்டும் கோபி இல்லாமல் நான் வரமாட்டேன் என்று பேக்குடன் பாக்யாவின் வீட்டிற்குள் நுழைகிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், 'திரும்பவும் முதல்ல இருந்தா? ஏற்கனவே ராதிகா பாக்கியா வீட்டில முக்குடைஞ்சி வெளியே போனது மறந்துட்டீங்களா? அத்துடன் இப்போ அது கோபி வீடு கூட கிடையாது, பாக்கியா வீடு. இப்படி திரும்பத் திரும்ப அரைச்ச மாவையே அரைக்கிறதுக்கு இந்த சீரியலுக்கு ஒரு எண்டு கார்டு போடலாம்' என பலரும் கருத்து கூறி விமர்சனம் செய்து வருகின்றனர்.

இவ்வாறு, பாக்கியலட்சுமி சீரியலில் தீராத பிரியம் கொண்ட ரசிகர்கள் தற்போது குறித்த சீரியலை பார்க்கவே மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement