• May 20 2024

தமிழ் சினிமாவில் உங்க ஆட்கள் மட்டும் தான் வேலை பார்க்கணுமா..? உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய பவன் கல்யாண்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரை உலகில் கொடிகட்டி பறக்கும் ஒரு சூப்பர் ஹிட் நடிகர் தான் பவர் ஸ்டார் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாது சிறந்த அரசியல்வாதியும் கூட. அதுமட்டுமல்லாது இவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. 


குடும்ப வாழ்க்கையையும், அரசியலையும் சிறப்பாக கவனித்துக் கொண்டு வரும் பவன் கல்யாண் நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார். அந்தவகையில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த 'விநோதய சித்தம்' என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ப்ரோ' என்ற படத்தில் நடித்துள்ளார்.


இப்படமானது நாளை மறுநாள் (ஜூலை 28) வெளியாகவிருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் தமிழ் சினிமாவுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அந்தவகையில் அவர் அதில் கூறுகையில் "தமிழ் திரையுலகம் நான் சொல்லும் வேண்டுகோளை கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு வேலையை நம் ஆட்களால் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்க வேண்டாம் .இன்று தெலுங்கு சினிமாக்கள் முன்னேறி இருக்கிறது என்றால் இங்குள்ளவர்கள் எல்லா மொழிகளிலும் உள்ள அனைவரையும் ஏற்றுக்கொள்வதால் தான்" எனக் கூறியுள்ளார்.


அதுமட்டுமல்லாது "தமிழக தொழிலாளர்களை மட்டும் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று நினைக்கக்கூடாது. எனவே தமிழ் சினிமா அனைத்து மொழி மக்களுடனும் இணைந்து நீங்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்தப் பேச்சினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement