• Sep 20 2024

ஷாக்கில் பாக்கியா செய்த வேலை-கதறி அழும் ஈஸ்வரி – பாக்கியலட்சுமி எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓட்டிச்செல்லும் சீரியல் பாக்கியலட்சுமி.தற்போது வீட்டிற்கு உண்மை தெரியவர கோபி என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்…

பாக்யா கோபி மற்றும் ராதிகாவுக்விற்கிடையே இருக்கும் உறவை தெரிந்து கொண்ட நிலையில் அதே அதிர்ச்சியில் ரோட்டில் மழையில் நனைந்தபடி நடந்து செல்கிறார். கண் விழித்த கோபியிடம் உங்க மனைவி ராதிகா கிளம்பிட்டாங்களா என கேட்க கிளம்பிட்டாங்க என சொல்கிறார்.

ரொம்ப பதட்டமா வந்தாங்க உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்ற வரைக்கும் அவங்க நார்மலாவே இல்லை என நர்ஸ் சொல்வதைக் கேட்டு கோபி சந்தோஷப்படுகிறார். ஆனால் பாக்கியா அந்த விஷயத்தைப் பற்றி நர்ஸிடம் எதுவும் கேட்கவில்லை.

அதன் பின்னர் கோபி வீட்டுக்கு போன் போட்டு செழியனிடம் தனக்கு ஆக்சிடென்ட் ஆகி மருத்துவமனையில் இருப்பதாக சொல்ல குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைந்து கோபியை பார்க்க கிளம்புகின்றனர்.

மேலும் இந்த பக்கம் பாக்கியா மழையில் நனைந்தபடி சிக்னலில் வந்து சுற்றி நடப்பது எதுவும் தெரியாமல் அப்படியே நின்று கொண்டிருக்க வாகன ஓட்டிகள் அனைவரும் சத்தம் போடுகின்றனர். பின்னர் டிராபிக் போலீஸ் அவரை அப்புறப்படுத்துகிறது.

மருத்துவமனைக்குச் சென்ற எல்லோரும் கோபியை பார்த்து நலம் விசாரிக்கின்றனர். நீங்க போன் பண்ணி டென்ஷனா பேசுனதால் வேகமாக கார் ஓட்டி வந்து ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என்ன கோபி சொல்ல ஈஸ்வரி கண்கலங்கி அழுகிறார். எதுக்காக போன் பண்ணிணீங்க என கேட்க இனியா உண்மையை சொல்ல வந்த நிலையில் ஈஸ்வரி இப்போது வேண்டாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என சொல்கிறார்.

இந்த பக்கம் பாக்கியா அப்படியே நடந்து வீட்டுக்கு செல்ல அவருடைய மாமனார் அமர்ந்து கொண்டு இருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement