• May 19 2024

விடுதியில் ஒன்றாக இருந்தது ஏன்? நரேஷ் பாபுவின் தொடர்பை பற்றி விளக்கிய நடிகை பவித்ரா!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல குணச்சித்திர நடிகையான பவித்ரா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே இவர், சுசீந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து 6 ஆண்டுக்கு பின் பிரிந்து தனியாக வாழ்ந்த நிலையில், பின்னர் நரேஷ் பாபுவை திருமணம் செய்துகொண்டார்.

இதனிடையே, நரேஷ் பாபுவும் பவித்ராவும் ஓட்டலில் ஒரே அறையில் தங்கியிருந்த போது நரேஷ் பாபுவின் மனைவி ரம்யா ரகுபதி அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து செருப்பால் அடிக்க முயன்றுள்ளார் என்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அதுமட்டுமின்றி நடிகை பவித்ரா பணத்துக்காக தனது கணவரை 4வது திருமணம் செய்து கொண்டு குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், ரம்யாவின் குற்ற சாட்டுகளை மறுத்த பவித்ரா, நான் நரேஷை 4வதாக திருமணம் செய்யவில்லை எனவும், 200 படங்களில் நடித்த நான், அவருடன் 4, 5 படங்களில் நடித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, கணவர் சுசீந்திர பிரசாத்தை நான் திருமணம் செய்யும் போது அவரிடம் பணம் எதுவும் இல்லை. வீடு, கார், இல்லை ஆனாலும் அவருடன் 11 வருடம் வாழ்ந்தேன் என தெரிவித்தார்.

அவரை பிரிந்த பிறகும் தங்களுக்குள் கடந்த 6 ஆண்டுகளாக நல்ல நட்பு இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ள பவித்ரா, நரேஷின் அறிமுகம் கிடைக்கும் போது அவர் மகேஷ் பாபுவின் சகோதரர் என்று தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

அத்தோடு , படத்தில் ஒன்றாக பணியாற்றும் போதுதான் நரேஷும், தானும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டதாகவும் வீட்டில் யாரும் இல்லை அவர் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால், ரம்யா தேவையில்லாமல் அவரது குடும்ப பிரச்சினையில் தன்னை இழுப்பதாகவும் இதுவரை ரம்யா ரகுபதியை நேரில் பார்த்தது கூட இல்லை என்றும், தனது கணவரிடம் இருந்து தான் விவாகரத்து பெறுவது தன்னுடைய பிரச்சினை என்றும் அதை தானே பார்த்துக்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தன்னை பற்றி பரவும் வதந்திகள் தொடர்பாக சைபர் கிரைம்மில் புகார் அளித்துள்ளதாகவும் பவித்ரா தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement