• Sep 20 2024

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் பாக்கியலட்சுமி கோபி… வைரலாகும் வீடியோ…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் கடந்த 2 வாரமாக சீரியலில் எதிர்பார்க்காத திருப்பங்கள் நடைபெற்று வருகின்றது. கோபி பற்றிய உண்மை முதலில் ராதிகாவுக்கு தெரிந்தது. பின்பு கோபி - ராதிகாவுக்கு இடையே சண்டை. அடுத்த சில நாட்களில் ராஜேஷ் கோபி வீட்டுக்கு வந்து சண்டை போடுகிறார். இந்த குழப்பத்தில் வீட்டில் இருக்கும் எல்லோரும் கோபிக்கு ஃபோன் செய்தனர்.

அதன் பின்பு கோபிக்கு கார் விபத்து நிகழ அவர் ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆனார். மேலும் இந்த நேரத்தில் கோபியை பார்க்க ராதிகா ஆஸ்பிட்டல் வருகிறார். இருவரும் பேசியதை பாக்கியா பார்த்து விட்டார். இப்போது வீட்டில் புயல் அடிக்கிறது. கோபி பற்றிய உண்மையை மொத்த குடும்பத்திடமும் பாக்கியா கூறிவிடுகிறார்.

இதன் பின்பு என்ன ஆகும். கோபி - பாக்கியா பிரிந்து விடுவார்களா? ராதிகா - கோபி திருமணம் நடக்குமா என பல கேள்விகளுடன் ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டு இரக்கிறார்கள். இந்த நேரத்தில் கோபியாக நடிக்கும் நடிகர் சதீஷ் குமார் ரசிகர்களிடம் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. ட்விட்டரில் வைரலாகி வரும் இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும அந்த வீடியோவில் காலை வணக்கம் கூறிவிட்டு பேச தொடங்கும் கோபி , தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்களுக்கு நன்றி கூறுகிறார்.பின்பு, அடுத்த 1 வாரத்திற்கு செய்த தப்புக்கு குற்றவாளியாக தண்டனை அனுபவிக்க தயார் ஆகுகிறேன். பாவம் கோபி என்ன பண்ண முடியும். காதலுக்காக நிறைய பொய் பித்தலாட்டங்களை சொல்லி இருக்கிறார்.

அதை அனுபவிச்சு தான் ஆகணும். வயசானால் காதல் பண்ண கூடாது, அப்படியெல்லாம் சட்டம் இருக்கு, என்ன பண்றது.ஓகே நன்றி என கூறி வீடியோவை முடித்துள்ளார்.மேலும் இதை ஒருவகையான சீரியல் புரமோஷனாகவும் எடுத்துக் கொள்ளலாம். கோபிக்காக சதீஷ் பேசி இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement