• Sep 20 2024

ரஜினி செய்த செயலால் சர்ப்ரைஸ் ஆன நெல்சன் டீம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டங்களில் தொடங்கி இன்று வரை இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவருடைய நடிப்பு திறமைக்காக கடந்த ஆண்டு தேசிய விருதும் கிடைத்து இருந்தது. இதற்கு பலரும் பாராட்டி இருந்தார்கள்.

இவ்வாறுஇருக்கையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்படுகின்றது.

ஹீரோயினாக ஐஸ்வர்யா பச்சனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். விரைவில் ஹீரோயின் பற்றிய அறிவிப்பும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சன் முந்தைய படமான பீஸ்ட் நல்ல வரவேற்பை பெறாத நிலையிலும் ரஜினி தன் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சனுக்கு கொடுத்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் நெல்சனுக்கு திரைக்கதை எழுத உதவ இருப்பதாக வந்த தகவல்களும் உண்மை இல்லையாம்.

இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. நெல்சன் மற்றும் டீம் டிஸ்கஷன் நடைபெறும் ஆபிசுக்கு சென்ற ரஜினி அவர்களுடன் ஸ்டோரி டிஸ்கஷனில் கலந்துகொண்டாராம். அத்தோடு தனக்கு இருக்கும் கருத்துக்களையும் அவர் அவர்களிடம் கூறியதாக தெரிகிறது.

மேலும் சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் ரஜினிகாந்த் இப்படி செய்திருப்பது சினிமா துறையில் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

பிற செய்திகள்

Advertisement

Advertisement