• Sep 20 2024

நயன்தாரா விக்கி திருமணம் திருப்பதியில் இல்லையாம்-எங்கு தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றார்கள்.இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது.

இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என கடந்த சில மாதங்களாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.

மேலும் குறிப்பாக நயன்தாராவின் அப்பா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோதே விக்கிக்கும் நயனுக்கும் திருமணம் என கூறப்பட்டது. ஆனால் இருவரும் நானும் ரவுடிதான் படத்தை போன்ற ஹிட் படத்தை கொடுத்த பிறகே திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தனர். சமீபத்தில் விக்கி இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

அத்தோடு இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் என 150 பேரை அழைக்க விக்கியும் நயன்தாராவும் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் அத்தனை பேரை அழைத்து வர திருப்பதி தேவஸ்தானம் மறுத்துவிட்டதாம். இதனால் சொன்ன தேதியில் அதாவது ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்திலுள்ள ஸ்டார் ஹோட்டலில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்களாம் என தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் இதையடுத்து உடனடியாக திருமணம் செய்துகொள்ளும் முடிவு செய்தனர் விக்கியும் நயன்தாராவும். திருப்பதியில் தங்களின் திருமணத்தை நடத்த திட்டமிட்ட இருவரும் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஜூன் 9 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள மடத்தில் திருமணம் நடைபெறுவதாக தகவல் வெளியானது.

இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் திருமண வேலைகளுக்காக இருவரும் அடிக்கடி மகாபலிபுரம் சென்று வருகின்றனர். சமீபத்தில் மகாபலிபுரத்தில் ஹேட்டலில் சாப்பிட்ட வீடியோவை ஷேர் செய்திருந்தார் விக்னேஷ் சிவன். அப்போது நயன்தாராவுக்கு தனது கையால் ஊட்டிவிட்டார். அந்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement