தமிழ் சினிமாவில் சூர்யா-ஜோதிகாவிற்கு அடுத்தபடியாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை வென்ற ஜோடி என்றால் அது நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தான். இந்த ஜோடிக்கு கடந்த ஜூன் மாதம் தான் திருமணம் நடந்து முடிந்தது.
இன்னும் திருமண வீடியோ கூட நெட்பிளிக்ஸில் வெளியாகாவில்லை. அதற்குள் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துவிட்டதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர் இந்த தம்பதியினர். இதனைப் பார்த்து கல்யாணமான நான்கே மாதத்தில் குழந்தையா என அனைவரும் ஷாக் ஆகினர்.
அதுமட்டுமின்றி இவர்கள் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டதும் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் சட்டத்தை மீறி அந்த முறையில் குழந்தை பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதித்து வந்தனர். ஆனால் வாடகைத் தாய் தடைச் சட்டத்தால் விக்கி - நயன் ஜோடிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
இவ்வாறாக நயன் - விக்கி ஜோடியை ஒருபுறம் சர்ச்சைகள் சூழ்ந்திருந்தாலும், மறுபுறும் பல திரைப்பிரபலங்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அந்தவகையில் நயன்தாராவுடன் 'காஷ்மோரா' படத்தில் இணைந்து நடித்த கார்த்தியும் தற்போது இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து சர்ப்ரைஸாக பூங்கொத்து ஒன்றையும் பரிசாக அனுப்பி உள்ளார்.
கார்த்தி அனுப்பிய இந்தப் பரிசினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.
Listen News!