நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகியிருந்த திரைப்படம் தான் பிரின்ஸ். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது.வசூல் ரீதியாக படம் வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 6 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இவரது நடிப்பில் இதற்கு முதல் வெளியாகிய டாக்டர், டான் உள்ளிட்ட படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அவற்றுடன் ஒப்பிட்டு பார்த்தால் பிரின்ஸ் திரைப்படம் செய்திருக்கும் வசூல் மிகவும் குறைவுதான் என்று கூற வேண்டும்.
இந்த நிலையில் பல சினிமா பிரபலங்கள் விநியோகஸ்தர்கள் ரஜினி, விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது என கூறுவது உண்டு. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் பலர் ப்ரின்ஸ் படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் ஒரு வீடியோ ஒன்றை ட்ரெண்ட் செய்து சிவகார்திகேயனை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
வீடியோவில், சிவகார்த்திகேயன் விஜய்யை பார்த்து ‘முதல்ல ஒரு நல்ல டைரக்டர் கிட்ட ஒரு நல்ல கதையை கேளுங்க’ என்று சாலமன் பாப்பையா கூறுவது போல் மிமிக்ரி செய்துள்ளார். எனவே அதனை விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை பார்த்து நீங்கள் நல்ல கதையை தேர்வு செய்யுங்கள் என ட்ரோல் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Karma is a boomerang #sk bro🤣#prince @Siva_Kartikeyan#vijay #Sivakarthikeyan #thalapathy #varisu pic.twitter.com/xp1Khkj7FJ
Listen News!