• May 04 2024

உடல் எடை அதிகரித்து ஆளே மாறிய நதியா…ஏன் இப்படி மாறிட்டீங்க..?கேள்வி கேட்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவை தனது அழகினாலும், சிறந்த நடிப்பினாலும் கட்டிப் போட்ட ஒருவரே நடிகை நதியா. இவர் குறிப்பாக 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், அதன் பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் பெரியளவில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்திய இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லிவிற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார்.

உதாரணமாக நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா சைக்கிள் என இவரின் பெயரில் பலவும் வெளிவந்திருந்தன. அதுமட்டுமன்றி "நதியா நதியா நைல் நதியா…" என இவரின் பெயரிலே பல பாடல்களும் உருவாகி இருந்தன. அந்தளவிற்கு பிரபல்யமாகி இருந்தார்.

இவ்வாறாக 80 களில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்த நதியா 2004-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம்.குமரன் படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக கம் பேக் கொடுக்கும்போது பலரையும் அச்சரியத்தில் ஆழ்த்தினார். தமிழைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளிலும் நடித்து இன்றும் நம்பர் 1 நாயகியாக வலம் வருகிறார்.

இவ்வாறாக நதியா பற்றி பல பாராட்டுக்களை நாம் அடுக்கிக்கொண்டே சென்றாலும் அதற்கு பின் இருக்கும் நதியாவின் உழைப்பு சாதாரணமான ஒன்றல்ல. இப்படி எப்போதும் ஃபிட்டாகவும் இளமையாகவும் இருக்க இவரால் முடிகிறதெனில் அதற்கு பின் அவர் எத்தனை எத்தனையோ தியாகங்களை செய்திருக்க வேண்டும்.

அதாவது உணவில் கட்டுப்பாடு, தினசரி உடற்பயிற்சி , அழகுப் பராமரிப்பு , யோகா, சரியான நேரத்தில் உணவு இப்படி பல விஷயங்களை கையாள வேண்டும்.

நதியா உடல் தோற்றத்தில் மட்டுமல்லாது இன்றைய இளைஞர்களின் ஃபேவரட் இடமான சோஷியல் மீடியாக்களிலும் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருபவர். அந்தவகையில் சமீபத்தில் அவர் தனது மகள்களுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில் இவர் அச்சு அசல் அவரது மகள்களைப் போல இளமையாகவே இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் தற்போது ஊஞ்சலில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றினைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். அதில் இவர் சற்று உடல் எடை அதிகரித்துக் காணப்படுகின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "எதற்காக திடீர் என்று இளைத்து விட்டீர்கள்" எனக் கேட்டு தமது கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement