• Apr 28 2024

மறுபடியும் சிக்கலில் சிக்கிய கமல்ஹாசனின் 'இந்தியன் 2'…இன்னும் எவ்வளவு காலம் இழுபடுமோ தெரியலயே…ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர்களில் ஒருவராகவும், சிறந்த அரசியல் வாதியாகவும் விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமன்றி திரைக்கதை ஆசிரியர், பின்னணிப் பாடலாசிரியர், இயக்குநர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்திறமை கொண்டவராகவும் விளங்குகின்றார். படங்களின் வாயிலாக தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தமையால் இவர் ரசிகர்களால் உலகநாயகன் எனப் போற்றப்படுகின்றார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்து தயாரித்து சமீபத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ஆனது வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் கடந்த ஜூன் மாதம் வெளியான 'விக்ரம்' திரைப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்து வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையையும், அமோக வரவேற்பினையும் பெற்றுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் புகழ் பெற்ற கமல் தொடர்ந்து பல படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார். அதன்படி அடுத்ததாக மலையாள திரையுலகில் பிரபல இயக்குநராக விளங்கி வருகின்ற மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு முன்னராக அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஷங்கரின் 'இந்தியன் 2' படத்தை மீண்டும் தூசி தட்டுகிறார் நம்ம கமல். கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'இந்தியன் 2' திரைப்படம் பல பிரச்சனைகளை சந்தித்து தற்போது சில காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல் சினிமாவைத் தாண்டி அரசியல் மற்றும் டீவி நிகழ்ச்சிகள் என பிஸியானார். இவரைப் போன்றே மறுபக்கம் இயக்குநர் ஷங்கரும் தெலுங்கு படம் எடுக்கச் சென்றார். எனவே 'இந்தியன் 2' திரைப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் தகவல்கள் பரவின.

ஆனாலும் 'விக்ரம்' படத்தின் உடைய சக்ஸஸ் மீட்டில் பேசும் போது கமல் 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கும் என உறுதி மொழி அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர்.

மேலும் இயக்குநர் ஷங்கர் தற்போது இயக்கிவரும் ராம் சரண் படத்தை முடித்த பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பை உடனே தொடங்குவார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர். எனினும் தற்போது தெலுங்கு திரையுலகில் ஸ்ட்ரைக் நடைபெற்று வருவதால் அங்கு படப்பிடிப்புக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்ட்ரைக்கின் காரணமாக தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வந்த 'RC 15' படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு சாதகமான முடிவு கிடைக்கும் வரையில் ஸ்ட்ரைக் தொடரும் என்பதால் படப்பிடிப்பு தொடங்க மென்மேலும் தாமதமாகும் என்று தெரிகின்றது. அவ்வாறு தாமதமாகும் பட்சத்தில் இந்தியன் 2 படத்தைத் தொடங்கவும் தாமதம் ஏற்படலாம்.

மேலும் ராம் சரண் படத்தை முடித்த பிறகே ஷங்கர் 'இந்தியன் 2' படப்பிடிப்பை தொடங்குவார் என்பதால் தெலுங்கு திரையுலகில் இந்த ஸ்ட்ரைக் தொடர்வது 'இந்தியன் 2' படத்திற்கும் பெரியளவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement