• Apr 28 2024

இதற்கு 30 வருடங்கள் ஆவது வேண்டும்…மணிரத்னம் பற்றிப் பேசிய கார்த்தி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்பவர் நடிகர் கார்த்தி. சினிமாப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர் தனது நடிப்புத் திறமையால் முன்னணி நடிகராகத் திகழ்கின்றார். 2004 ஆம் ஆண்டு வெளிவந்த 'பருத்தி வீரன்' என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியமையால் 'சிறந்த நடிகருக்கான பிலிம்பேர்' விருது இவருக்குக் கிடைத்தது. இவரது நடிப்பில் உருவாகிய படங்களாக 'ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் சகோதரி, சகுனி, பையா, நான் மஹான் அல்ல' போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.

இவர் தற்போது மணிரத்தினத்தின் கனவுப் படமான 'பொன்னியின் செல்வன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. இதற்கு ஏகப்பட்ட வரவேற்பு இணையத்தில் ரசிகர்களால் கிடைத்தன. இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் குரலில் 'பொன்னி நதி…..' பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்தி இப்படத்தின் பாடலை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் இயக்குநர் மணிரத்னத்தை போன்று திரைப்படத்தை இயக்குவதற்கு முப்பது வருடங்கள் ஆகும் என்று குறிப்பிட்டதுடன் இவ்வளவு ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் இருப்பது மிகச் சிறந்த அனுபவமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement