• Apr 27 2024

"நமீதா இடத்தில் நடிக்குமாறு கூறி சிறிய சிறிய உடைகளைத் தருகின்றார்கள்"…கோபத்துடன் பொங்கி எழுந்த பிரபல நடிகை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவரே நடிகை ஜீவிதா. இவர் தொலைக்காட்சியின் வாயிலாக முதன் முதலாக 'மனதில் உறுதி வேண்டும்' என்னும் சீரியல் மூலமாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பின்னர் பல பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். அதுமட்டுமன்றி இவர் சீரியல்களில் கொடுக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஏற்ற மாதிரியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒருவராக இருக்கின்றார்.

இவ்வாறாக சின்னத்திரையில் 'ஆபீஸ், தேவதை' உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ஜீவிதா 'மாறன், கடைக்குட்டி சிங்கம்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். படங்களிலும் நடிக்கத் தொடங்கியிருப்பதால் அங்கு பெண்களுக்கு ஏற்படும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார்.

அதாவது தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் சினிமா துறையில் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் இருக்கும் பெண்கள் பலருக்கும் பாலியல் தொடர்பான பல தொல்லைகள் ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் இன்றைய சமுதாயத்தில் உள்ள பெண்கள் அதை எல்லாம் பார்த்து பயப்படாமல் தைரியமாக எதிர்த்து வருகின்றனர்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் "எனக்கு பட வாய்ப்பு கொடுக்க முன்வரும் பலரும் கிளாமராக நடிப்பீர்களா என்று தான் கேட்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நமீதா நடிக்க வேண்டிய ரோல் உங்களுக்கு தருகிறோம் என்று கூறி விட்டு கடைசியில் சிறுசிறு ஆடைகளை அணிந்து நடிக்கவேண்டும்" என்று கூறுகின்றனர் எனவும் தெரிவித்திருக்கின்றார்.

மேலும் "இதுபோன்ற வாய்ப்புகளை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன்" எனவும் அவர் கோபத்துடன் கூறியிருக்கிறார். மேலும் "ஒரு பெண் கவர்ச்சியாக நடித்தால்தான் அந்த சினிமா வெற்றி பெறுமா. கவர்ச்சி இல்லாமல் நல்ல கதை அம்சம் கொண்ட எந்த திரைப்படங்களும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படாதா" என்றும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார் நடிகை ஜீவிதா.

அத்தோடு "பெரியதிரையில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் கூட நடிகைகளை அட்ஜஸ்ட் செய்து கொள்ள பலரும் வற்புறுத்தி வருகின்றனர். இதுபோன்ற தருணங்களை சந்திக்கும் நடிகைகள் மனத்தைரியத்துடன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்" எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்..

மேலும் அவர் கூறுகையில் "சிலர் வேறு வழியில்லாமல் இதுபோன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் அவர்கள் பட வாய்ப்பை காட்டி இது போன்று கேவலமாக நடந்து கொல்பவர்களுக்கு துணிச்சலாக நோ செல்ல வேண்டும்" எனவும் இன்றைய நடிகைகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறார் நடிகை ஜீவிதா.

இவரின் துணிச்சலை பலரும் பாராட்டி வருவதோடு அவருடைய இந்த கருத்துக்கு திரையுலகில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது இவர் கூறிய கருத்துக்களை மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement