• Apr 28 2024

பிரமாண்டமாக வெளிவரவுள்ள அருண் விஜய்யின் 'பார்டர்'… அட இந்த நாளில் தானா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா கொண்டாடும் முக்கிய நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் நடிகர் அருண் விஜய். திரைத்துறைப் பின்ணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர் தனது தனித்துவமான நடிப்பின் வாயிலாக ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றார். 1995-ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த 'முறை மாப்பிள்ளை' என்ற திரைப்படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து இன்றுவரை தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும் இவர் பல்வேறு பல வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார். அந்தவகையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

மேலும் 'குற்றம் 23' படத்தைத் தொடர்ந்து அருண் விஜய் மற்றும் அறிவழகன் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியுள்ள இப்படத்தில் அருண் விஜய் ராணுவ வீரராக நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் ஏற்கனவே தயாராகி விட்டது. இருப்பினும் கொரோனா மற்றும் வேறு சில காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

இந்நிலையில் இப்போது ஆகஸ்ட் 31-ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆகையால் இப்போதிலிருந்தே ரசிகர்கள் இத் திரைப்படம் குறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement