• Apr 27 2024

3000 பேருடன் நடிகை ரோஜா…கின்னஸ் சாதனையா…?வைரலாகும் தகவல்…!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் அழகுக்குப் பேர் போன நடிகை என்றால் அது நம்ம ரோஜா தான். அதனால் தான் இன்று வரைக்கும் ரசிகர்கள் மனங்களில் நவரச நாயகியாக வலம் வருகின்றார். இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு திரையுலகிலும் தனது திறமையினால் கொடி கட்டி பறந்தவர்.

சினிமாவைத் தொடர்ந்து குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்த ரோஜா தற்போது அரசியலிலும் தனது திறமையை நிலை நாட்டி வருகின்றார். அந்த வகையில் சிறந்த அரசியல் வாதியாக இருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதனால் அவர் எது செய்தாலும், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது.

அந்த வகையில் ரோஜாவிற்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளதாக தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றது. அதாவது இவரை 3000 போட்டோகிராபர்கள் போட்டோ எடுத்ததை அடுத்து, உலகிலேயே அதிக போட்டோ கிராபர்கள் புகைப்படம் எடுப்பது இதுவே முதல் முறை என்பதால் ரோஜாவுக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

குறிப்பாக 3000 போட்டோ கிராபர்கள் புகைப்படம் எடுக்கத் தயாராக இருக்கும் போது ரோஜா மேடையில் ஏறியிருந்தார். அந்த 3000 பேரும் ஒரே சமயத்தில் அவரைப் புகைப்படம் எடுத்தனர். எனவே உலகிலேயே ஒரு அமைச்சரை ஒரே நேரத்தில் அதுவும் 3000 போட்டோகிராபர்கள் போட்டோ எடுப்பது இது தான் முதல் முறை என்பதால் இது சாதனையாக அனைவராலும் பார்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 'ஒன் கிளிக் ஆன் சேம் டைம்' என்ற இந்த சாதனைக்கான சான்றிதழினை நடிகையும் ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சருமான ரோஜாவிடம் அந்நிறுவனம் வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் ரோஜா மேடையில் நின்றபடி அங்கு வந்த அனைத்து போட்டோ கிராபர்களுடனும் செல்ஃபி புகைப்படமும் எடுத்து கொண்டார்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் ரோஜாவின் சாதனைக்கு அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு அவரை பாராட்டியும் வருகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement