• Apr 26 2024

வித்யாசாகரை முதலில் வேண்டாம் என்ற மீனா…திருமணம் செய்யக் காரணமாக இருந்தது யாரு..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை மீனா. இவரது நடிப்பிற்கும், நடனத்திற்கும், அழகிற்கும் மயங்காத ரசிகர்களே இல்லை என்று தான் கூறலாம். அந்தளவிற்கு மீனாவின் நடிப்பை தாண்டி அவரது அழகினை ரசிப்பதற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.

திரையுலகில் கண்ணழகி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகின்ற இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், பிரபு, அஜித், பிரபுதேவா, பார்த்தீபன் உள்ளிட்ட பலருடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறாகப் பல வெற்றிப் படங்களில் தொடர்ந்தும் பிஸியாக நடித்து வந்த நடிகை மீனா 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகினார். இவர்களுக்கு தற்போது நைனிகா என்ற அழகான மகள் ஒருவரும் உண்டு. இவரும் தனது தாயைப் போலவே சினிமாவில் குழந்தை நட்ஷத்திரமாகக் கலக்கி வருகின்றார்.

இந்நிலையில் சில மாதங்களாகவே உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் குஷ்பூ நடாத்திய நிகழ்ச்சி ஒன்றில் மீனா பேசிய விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் நடிகை மீனா கூறுகையில் "எனக்கும் சாகருக்கும் 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது, முதலில் அவரிடம் பேச எனக்கு சௌகரியமாக இல்லை. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மே மாதம் அளவிலேயே பேசத் தொடங்கினோம். பின்னர் ஜாதகம் பார்த்த போது இவர் ஓகே தான் ஆனால் இதைவிட நல்ல வரன் வருமே என்று ஜோசியர் சொல்லி விட்டார். அவர் அப்படி சொன்னதும் எனக்கும் சந்தோசமாக இருந்தது, உடனே அவர் வேணாம் என்றேன், அதுமட்டுமல்லாது அவரிடமே சென்று குட் பை சொன்னேன், அவரும் எனக்கு வாழ்த்து சொல்லிட்டு பை என்று சொல்லிட்டாரு" என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக மீனா கூறுகையில் அதன் பின்னர் எனது அத்தை வந்து, ஜோசியர் சொன்னால் உடனே வேண்டாம் என்று சொல்லி விடுவதா என்று சத்தம் போட்டார். அதன் பின்னர் மீண்டும் சாகர் குடும்பத்துடன் பேசி எங்களது திருமணம் நடந்தது, அதுமட்டுமல்லாது எங்களுக்குள் சண்டை வந்தாலும் முதலில் வந்து பேசுவது சாகர் தான்' என மீனா அந்த நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறாக அன்பான கணவருடன் மன நிறைவான வாழ்க்கையினை வாழ்ந்து வந்த மீனாவிற்கு அவரது கணவனின் இழப்பு என்பது ஒரு பேரிழப்பு தான்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement