சோழப் பேரரசின் ஆட்சி முறை வீரம் ஆகியவற்றை மையப்படுத்தி உருவான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இப்படம் வெளியாகிய 4 நாட்களில் 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து விட்டது. அத்தோடு இப்பட் 500 கோடி செலவில் எடுக்கப்பட்டது என்பதும் முக்கியமாகும்.
மேலும் இப்படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கலை இயக்குநராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஐஸ்வர்யா ராய் த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் பாசிடிவ் விமர்சனங்களையே பெற்று வருகின்றது.
இந்நிலையில் பிரபல சீரியல்நடிகைகளான அக்ஷயா மற்றும் ஸ்வேதா இருவரும் நந்தினி மற்றும் குந்தவை இருவரையும் போல லுக்கில் உடையணிந்து ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.இவர்களுள் நடிகை அக்ஷயா, ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இது தவிர இவர் இதற்கு முதல் பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர், குறிப்பாக சசிகுமார் நடிப்பில் வெளியான தாரைதப்பட்டை படத்திலும் நடித்திருக்கின்றார். இவருடன் இணைந்து சீரியல் நடிகை ஸ்வேதாவும் இணைந்து போட்டோஷுட் நடத்தியுள்ளனர். இது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!