• May 21 2024

கண்ணன் பார்த்த வேலையால் அவமானப்பட்ட ஜீவா மற்றும் மீனா- கேள்விக்கு மேல் கேள்வி கேட்ட ஜனார்த்தனன்- இரண்டாகப் பிரிந்த குடும்பம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

முல்லையின் அம்மா மல்லி உன்னோட அக்கா தனியா நீ ஏதாவது செய்தால் தானே உனக்கு மதிப்பு.என்று கூறிவிட்டு முல்லையிடம் இருந்து மொய் கவரை வாங்கிக் கொண்டு காசு போட போகின்றார். அங்கே நீண்ட லைன் நிற்பதைப் பார்த்து விட்டு கண்ணனிடம் மொய் கவரை கொடுத்து எழுத சொல்லி விட்டு வருகின்றார்.


இதனால் கண்ணனும் எல்லோருடைய பெயரிலும் தனித்தனியாக மொய் எழுதி விட்டு வருகின்றார். பின்னர் ஜீவாவின் மாமனாரிடம் மொய் எழுதிய பேப்பர் கொண்டு வந்து அவருடைய உறவினர் கொடுத்ததும் அவர் பார்க்கும் போது ஜீவா மற்றும் மீனாவின் பெயர் மட்டும் அதில் இல்லை. இதைப் பார்த்த அவர் மீனாவை அழைத்து மீனாவிடம் கேட்கின்றார்.

மீனா அதிர்ச்சியடைந்து நிற்க,பணம் இல்லாட்டி என்கிட்ட சொல்லி இருக்கலாம் தானே நானே தந்திருப்பேன் உன்னோட தங்கச்சி கல்யாணத்திற்கு நீ எதுவு் பண்ணாட்டி சொந்தக் காரங்க எல்லாம் தப்பா பேசுவாங்க என்று தெரியாதா? எனக் கூற மீனாவும் இதைக் கேட்டு அதிர்ச்சியடைகின்றார். பின்னர் ஜீவாவிடம் சென்று மீனா இது குறித்து கேட்கிறார்.


அப்போது ஜீவா எனக்கு இது தெரியாது இதை பற்றி அவங்க எதுவும் சொல்லல என சொல்ல மீனா வீட்டில எல்லாரும் சம்பாதிக்கிறாங்க.நம்ம வீடு முதல் மாதிரி இல்லடா எல்லாருமே மாறிட்டாங்க என்று சொல்ல ஜீவா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது. அடுத்து வரும் எப்பிஷோட்டில் ஜீவா மூர்த்தியிடம் சென்று மொய் விஷயம் குறித்து கேட்பதையும் காணலாம்.


Advertisement

Advertisement