• Jul 27 2024

ஜெயம் ரவிக்கு கமல்ஹாசன் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இதை எதிர்பார்க்கவே இல்லையே..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும்தக்லைஃப்திரைப்படத்தில் ஜெயம் ரவி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. ஜெயம் ரவி கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் தான் துல்கர் சல்மான் இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில் ஜெயம் ரவி, கதை என்ன என்று கேட்காமல், சம்பளம் கூட பேசாமல் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததும், அந்த படத்தை மணிரத்னம் இயக்கப் போகிறார் என்று சொன்னதும் மறு பேச்சு இல்லாமல் அவர் கேட்ட கால்ஷீட்டை ஜெயம் ரவி கொடுத்துவிட்டார் என்றும், இதனால் மற்ற படங்களில் கால்ஷீட் பாதித்தால் கூட தனக்கு கவலை இல்லை என்றும், ’தக்லைஃப்படம் தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான படம் என்று ஜெயம் ரவி கூறியதாகவும் தெரிகிறது.



இதையெல்லாம் கேள்விப்பட்ட கமல்ஹாசனுக்கு ஜெயம் ரவி மீது மரியாதை அதிகரித்ததாகவும் இதனை அடுத்து ஜெயம் ரவியே எதிர்பார்க்காத வகையில் ஒரு மிகப்பெரிய சம்பளத்தை கொடுத்ததாகவும் தற்போது அவர் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தை விட இரு மடங்கு என்றும் கூறப்படுகிறது.

சம்பளத்தை எதிர்பார்க்காமல் நடித்த ஜெயம் ரவிக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளதாகவும் அதனால் ஜெயம் ரவி மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு நிகராக ஒரு கேரக்டர் ஜெயம்ரவிக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த படம் வந்தால் ஜெயம் ரவியின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அதன் பின் அவருக்கு தொடர் வெற்றிகள் தான் வரும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement