• Apr 26 2024

அப்பாவிடம் பேசியே 3 மாதங்கள் ஆகிவிட்டதா… நைனிகாவின் பரிதாப நிலை!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை மீனா 2009ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் உடல்நலக் குறைவால் இறந்தார். கடந்த 6 மாதங்களாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் மாற்று நுரையீரல் கிடைப்பதில் தாமதமானது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுயநினைவை இழந்தார் வித்யாசாகர்.மேலும் இதனை தொடர்ந்து வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சைகள் அளிக்ப்பட்டு வந்தன. இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழந்து கடைசியில் கடந்த செவ்வாய்க்கிழமை அவரது உயிர் பிரிந்தது.

எனினும் இதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும் அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் வித்யாசாகர் மீனா தம்பதியின் மகள் நைனிகா குறித்த உருக்கமான தகவல் வெளியாகி மக்களிடத்தே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, நைனிகா தனது அப்பாவிடம் பேசி 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதாம். மேலும் வித்யாசாகர் மருத்துவமனையில் சுய நினைவுடன் இருந்தபோது தனது மகளுடன் பேசியுள்ளார். திடீரென அவர் சுயநினைவை இழந்ததால் பேச முடியாமல் போனது. 95 நாட்கள் நினைவு திரும்பாமலேயே இறந்துவிட்டார் வித்யா சாகர்.

அத்தோடு வித்யா சாகருக்கு மகள் என்றால் உயிராம். அவ்வளவு பாசத்துடன் மகளை வளர்த்து வந்துள்ளார். அதேபோல் நைனிகாவுக்கும் அப்பா என்றால் அவ்வளவு ஆசையாம். மேலும் அப்பாவுக்கு உடம்புக்கு முடியவில்லை என்றதுமே உடைந்து போய்விட்டாராம் நைனிகா. எப்படியும் மீண்டு வந்து விடுவாரென்ற நம்பிக்கையில் இருந்தனர் குடும்பத்தினர்.

இதனால் அன்பான அப்பாவிடம் பேசவே முடியாமல் கொடுமையின் உச்சத்தை இந்த வயதிலேயே அனுபவித்துள்ளார் நைனிகா.மேலும் மீனா குடும்பத்தினரும் பிரபலங்களும் மீனாவை விடவும் நைனிகாவை நினைத்து பெரும் கவலை கொண்டுள்ளனர். அத்தோடு நைனிகாவுக்கும் மீனாவுக்கும் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என கவலை தெரிவித்து வருகின்றனர்.

அப்போதுதான் நினைவை இழந்துள்ளார் வித்யா சாகர். இதனால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தனது அப்பாவிடம் பேச முடியாமல் தவித்து வந்தார் நைனிகா. அத்தோடு இன்று நினைவு திரும்பிவிடாதா, நாளை திரும்பிவிடாதா? பழையப்படி பேசிவிட மாட்டோமோ என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் நினைவு திரும்பாமலேயே இயற்கை எய்திவிட்டார் வித்யாசாகர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement