• May 07 2024

ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சீரியல் நடிகை ரச்சிதா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை ரச்சிதா கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான, பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இத் தொடரில் நடித்தவரையே காதலித்து திருமணமும் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து 10 க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்திருந்தாலும், இவரது சீரியல் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது ‘சரவணன் மீனாட்சி’ தொடர்தான்.இந்த தொடரில் அடுத்தடுத்து பல ஹீரோக்கள் மாறினாலும், ஒரே ஹீரோயினாக நிலைத்து நின்று, சீரியலை முடித்து விட்டு வெளியேறினார்.

இந்த சீரியல் மூலம் கிடைத்த பிரபலத்தைத் தொடர்ந்து இயக்குனர் ராதா மோகன் இயக்கிய ‘உப்புக்கருவாடு’ படத்தில் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்தார். மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்திருந்த இவர் தனது ரோலுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லை என சொல்லி திடீரென வெளியேறினார்.

அதற்கு பின் கலர்ஸ் தமிழில் "இது சொல்ல மறந்த கதை" என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் அடிக்கடி போட்டோஷூட் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ரச்சிதா. அவர் அடுத்து ஒரு வெப் சீரிஸில் நடிப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருக்கிறார்.

அது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement