பாலிவூட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் பிபாஷா பாசு, இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாலிவூட்டில் அதிக படங்கள் நடித்து வந்தார்.
இவர் கடந்த 2016ம் ஆண்டு பிரபல பாலிவூட் நடிகர் கரண் சிங் குரோவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இதனால் சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்து வந்ததோடு தனது கணவருடன் எடுக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் தற்பொழுது தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் மிகவும் உருக்கமாக கூறியுள்ளதாவது, "இது எங்களுக்கு ஒரு புதிய கட்டம், இருவர் மட்டுமே அன்பை பரிமாறிக்கொண்டிருந்தோம்.
தற்போது அது மூன்றாக மாறப்போகிறது. இது நம் அன்பின் வெளிப்பாடு என தன்னுடையை மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.இவரின் இந்தப் பதிவுக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!