• Sep 20 2024

'தலைவர் 169' படத்தில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளாரா?- அவரே வெளியிட்ட தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்பொழுது தனது 169 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளதாகவும் சன்பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் பீஸ்ட் திரைப்படம் வெளியாகியது. இப்படத்தில் இடம் பெற்ற 'அரபிக்குத்து' பாடலை சிவகார்த்திகேயன் தான் எழுதியிருந்தார்

இதனை தொடர்ந்து நெல்சன் இயக்கும் 'தலைவர் 169' படத்திலும் அவர் பாட்டு எழுதவுள்ளதாகவும், கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இது குறித்து சிவகார்த்திகேயன் கூறும் போது, 'நெல்சன் இயக்கும் படத்தில் ரஜினிகாந்துடன் நான் இணைந்து நடிக்கப்போவதாகவும், அந்த படத்துக்கு பாடல் எழுதுவதாகவும் தகவல் பரவி உள்ளது. அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. என்னை அழைக்கவும் இல்லை. அந்த படம் இப்போது ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. எனக்கு பொழுதுபோக்கு கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவே ஆசை. சமூக விஷயங்களை பேசும் அழுத்தமான கதைகள் வந்தாலும் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement