• Apr 28 2024

தென்னிந்திய சினிமாவில் பணக்கார நடிகை இவர் தானா?- இத்தனை கோடி சொத்து வைத்திருக்கின்றாரா?

stella / 8 months ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களைபப் போல கதாநாயகிகளும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். அத்தோடு நடிகர்களுக்கு இணையான சம்பளத்தையும் வாங்கி வருகின்றார்கள்.ஹீரோக்கள் ரூ. 100 கோடிக்கு மேல் வாங்கினால் அவருக்கு ஜோடியாக நடிக்கும் முன்னணி நடிகைக்கு ரூ. 5 கோடி முதல் ரூ.10 கோடி வரை கொடுக்கிறார்கள். 

அவ்வாறு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முக்கியமானவர் தான் நயன்தாரா. இவர் ஷாருக்கானின் ஜவான் படம் மூலம் பாலிவுட் சென்றிருக்கிறார்.இவர் ஒரு படத்திற்கு ரூ. 10 கோடி சம்பளம் வாங்குகிறார் என்றும் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்வதோடு இவரின் சொத்து மதிப்பு ரூ. 165 கோடி என்றும் சொல்லப்படுகின்றது. 


இவர் தான் தென்னிந்தியாவிலேயே பணக்கார நடிகையாம்.இவரைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தை நடிகை தமன்னா பிடித்துள்ளாராம்.அவரின் சொத்துமதிப்பு சுமார் ரூ. 110 கோடி ஆகும். சினிமாவில் கிடைக்கும் வருமானத்தை நகை வியாபாரத்தில் முதலீடு செய்து வருகின்றார் என்றும் கூறப்படுகின்றது.


நடிகை அனுஷ்கா ஷெட்டிதான் மூன்றாவது பணக்கார நடிகையாம்.அவரின் சொத்துமதிப்பு ரூ. 100 கோடி என்றும் கூறப்படுகின்றது.இவர்களுக்கு அடுத்ததாக சமந்தா அந்த இடத்தை பிடித்துள்ளாராம்.சமந்தாவின் சொத்து மதிப்பு 89 கோடியாம். 5வது இடத்தில் இருப்பவர் பூஜா ஹெக்டே. பாலிவுட், டோலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடியாகும். அவர் படங்கள் தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

நேஷனல் கிரஷ்ஷான ரஷ்மிகா மந்தனா ரூ. 28 கோடி சொத்துக்களுடன் 6வது இடத்தில் இருக்கிறார். ரஷ்மிகா தற்போது பாலிவுட்டில் பிசியாகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement