• May 20 2024

கோலி சோடா பட நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டதா.. கணவர், குழந்தையுடன் அவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ் புகைப்படம்..

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

கோலி சோடா 2014ஆம் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். மேலும் இந்தத் திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்கினார். 


சேரனின் தயாரிப்பில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் எட்டு வருடங்கள் கழித்து கோலி சோடா படத்தை இயக்கினார்.

அதுமட்டுமல்லாமல் இவர் பிரியமுடன், வனயுத்தம், தீபாவளி, நெஞ்சினிலே, சாக்லெட், ஆட்டோகிராப், காதல், காதலில் விழுந்தேன், வழக்கு எண் 18/9, உட்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இந்நிலையில் கோலி சோடா படத்தில் கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி, சீதா, உள்ளிட்ட பல இளம் நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இதில் சாந்தினி என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கோலி சோடா படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் பேர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. இதன்பின், நடிகை சாந்தினி திருமணம் செய்துகொண்டார்.


இவருக்கு அழகிய ஆண் குழந்தையும் உண்டு. தனது கணவர் மற்றும் மகனுடன் நடிகை சாந்தினி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement