• May 20 2024

தயாரிப்பாளரை வன் கொடுமைச் சட்டத்தில் சிறையில் அடைத்த மறைந்த நடிகரின் மனைவி- கொடுத்த கடனை கேட்டது ஒரு குற்றமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சிவா மனசில புஷ்பா உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்தவர் வாராகி. இவர் விருகம்பார்க்கம் நடேசன் நகரில் உள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றார். இவர் அதே குடியிருப்பில் வசித்து வரும் சுஜிதா என்ற பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நீண்ட மாதங்களாக வற்புறுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனால் மன உழைச்சலுக்கு உள்ளான சுஜிதா வடபழனியில் உள்ள காவல் நிலையத்தில் வாராகி மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் இவரை கைது செய்ததோடு இவர் மீது பெண் வன்கொடுமை சட்டம் ,பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல் ,மிரட்டல் உட்பட ஆறு பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர் ஜாமீனில் வெளிவந்ததோடு சுஜிதா மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தற்கொலை செய்து கொண்ட சாய்பிரசாத்தின் இரண்டாவது மனைவி தன்னோடு 2016ம் ஆண்டிலிருந்து மூன்று வருடங்கள் வேலை பார்த்ததாக தெரிவித்தார்.

பின்பு அவரது நடவடிக்கை சரி இல்லாததால் வேலையில் இருந்து நின்று விட்டார். இந்த நிலையில் தனக்கு ஆன்லைனில் கடன் அதிகமாகி வட்டி மட்டும் அதிகமாகியதால் கடனாக மூன்று அல்லது இரண்டு லட்சம் வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஆன்லைனில் கடன் கட்டாததால் ஆபாசமாகப் பேசுவதாகவும் போட்டோ வீடியோ அனுப்பி மிரட்டுவதாகவும் சுஜிதா வாட்சாபில் கூறினார். அத்தோடு இரண்டு நாட்களில் பணத்தை தருவதாகக் கூறியதால் மகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த வைத்திருந்த பணத்தை கொடுத்து உதவினேன் என்று கூறியுள்ளார்.

பணத்தை மீண்டும் கேட்டபோது தான் அலைக்களிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அத்தோடு அந்த பணத்தை திரும்பிக் கேட்கக் கூடாது என்பதற்காகவே இவர் இப்படிக் கூறுவதாகவும் அவர் பேசிய ஆடியோ, வாட்சாப் மெசேஜ் என்பனவற்றை ஆதாராமாகக் காட்டியுள்ளார். இதனை அடுத்து சுஜிதா மீது விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement