தமிழ் சினிமாவில் 2010-ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளி வந்த எவராலும் மறக்க முடியாத காதல் திரைப்படங்களில் ஒன்று "விண்ணைத்தாண்டி வருவாயா".
இப்படத்தின் கதை ஒரு இந்துவான கார்த்திக்கிற்கும், மலையாள கிறிஸ்தவரான ஜெஸிக்கும் இடையேயான காதல், அதனால் அவர்களின் குடும்பங்களில் நிகழும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் இருவரின் மன நிலையை விவரிக்கும் நிகழ்வுகளின் கோர்வையாக சொல்லப்படுகிறது.
அந்தளவிற்கு உணர்ச்சி பூர்வமாக மனதை உலுக்கிய காதல் திரைப்படம் என்றால் அது "விண்ணைத்தாண்டி வருவாயா" தான். சிம்பு-த்ரிஷா ஜோடியாக நடித்த இப்படம் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பை பெற்றிருந்தமை யாவரும் அறிந்ததே.
இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் "விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நான் நடிக்க தவறி விட்டேன் " எனக் கூறியுள்ளார்.
அவர் வேறு யாருமில்லைங்க நம்ம ஜெய் தான். தான் "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தைத் தவறவிட்டதாக மிகவும் வருத்தத்துடன் பேசியுள்ளார்.
இப்படம் வெளிவந்து சுமார் 10-ஆண்டுகளுக்கு மேலாகியும் பேசப்பட்டு வருகின்றது என்றால் எந்தளவிற்கு அனைவரினதும் மனதில் இடம் பிடித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- தாயாக நடித்துள்ள நடிகை ஸ்ரீதிவ்யா- இதுவரை யாரும் பார்த்திடாத அரிதான புகைப்படம்
- பருந்தாகுது ஊர்க்குருவி என்னும் திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
- தூள் பட வில்லி சொர்ணாக்கா தனது கடைசிக் காலத்தில் இப்படித் தான் வாழ்ந்தாரா?
- நேற்று ஐரோப்பா ,இன்று பெல்ஜியம்- ஜாலியாக ஊர் சுற்றி வரும் அஜித்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- சூழல் வெப் தொடரின் திரைவிமர்சனம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!