தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளியாகிய 'சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் துஷாரா விஜயன்.இப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து இவர் இரண்டாவது முறையாக பா.ரஞ்சித் இயக்கத்தில் இயக்கத்தில் 'நட்சத்திரம் நகர்கிறது' என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வந்தாலும், படம் வெளியாக முதல் பத்திரிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.இதில் இந்த படத்தின் நாயகி துஷாரா விஜயனும் கலந்து கொண்டார். படம் பார்த்து முடித்த பின்னர் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு துஷாரா விஜயன் மிகவும் சுவாரசியமாக பதிலளித்தார்.
இந்த நிகழ்ச்சிகள் பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டு நேரடியாகவே சில எடக்கு மொடக்கான கேள்விகளை கேட்டுள்ளார்.நட்சத்திரம் நகர்கிறது படத்தில் தன் பால் ஈர்ப்பாளர்கள் பற்றிய காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதே..இதன் மூலம் புது கலாச்சார சீரழிவை உண்டாக்குகிறீர்களா? என்று பயில்வான் கேட்க..இதை தான் கலாசார சீரழிவாக பார்க்கவில்லை என பதில் கொடுத்தார்.
அர்ஜுன் கதாபாத்திரம் மற்றும் வில்லன் வைக்கும் கேள்விகளுக்கான பதில்கள் எங்கே? என்று பயில்வான் கேட்க.இதற்கு பதிலளித்த துஷாரா விஜயன், எங்கள் கருத்தை இந்த படத்தின் மூலம் நாங்கள் முன் வைக்கிறோம், யாரும் எங்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என பதிலடி கொடுத்தார்.தொடர்ந்து வம்பிகுழுக்கும் வகையில் பேசிய பயில்வான் வாயை அடைப்பது போல்... தான் நடித்த இரண்டு படத்தையும் ஒன்றாகத்தான் நினைக்கிறேன். வேறுபடுத்தி பார்க்கவில்லை. எனக்கு இரண்டு படங்களும் நல்ல நினைவுகள் தான் என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!