தென்னிந்திய சினிமாவில் மக்கள் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவர் ரகுமான். இவர் நடிப்பில் உருவான படங்களில் 'சங்கமம்' என்ற படம் இன்று வரைக்கும் நம்மால் மறக்க முடியாது. வணிக ரீதியாக அந்தப்படம் வெற்றியடையாவிட்டாலும் பலரிடமிருந்து பாராட்டுக்களை பெற்றிருந்தது.
அதுமட்டுமல்லாது சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திலும் நடிகர் ரகுமான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அவருடைய கதாபாத்திரத்தை வைத்துதான் நந்தினியும் பெரிய பழுவேட்டரையரும் அருண் மொழி வர்மனுக்கு எதிராக திட்டம் தீட்டுவார்கள். இந்தப் படத்தின் வாயிலாக இவரும் பல பாராட்டுக்களை பெற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ரகுமானின் மகளுக்கு திருமணம் நடந்தது. அதற்காக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு முறையாக மரியாதை செலுத்தி பத்திரிக்கை வைத்திருந்தாராம் ரகுமான்.
ஆனால் திருமணத்தன்று ஊட்டியில் ஒரு ஹெலிகாப்டர் கிராஷ் நடந்திருந்தால் அதனை மேற்பார்வையிட முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அங்கு சென்று விட்டாராம்.
இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின் திருமணத்திற்கு வர மாட்டார் என்று ரகுமான் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அன்றே விமானத்தில் சென்னைக்கு வந்தாராம்.
அதாவது மாலை திருமண வரவேற்பில் அவர் கலந்து கொள்ள மண்டபத்திற்கு வந்தபோது தான் தனது பெண்ணை அழைத்துக் கொண்டு மேடைக்கு சென்று கொண்டிருந்ததால் பெண்ணை மேடையில் ஏற்றிவிட்டு அந்த சடங்கை முடித்துவிட்டு வருகிறேன் என்று முதல்வரின் செக்கரட்ரியிடம் கூறினாராம் ரகுமான்.
அதனை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடிகர் ரகுமானை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தன்னுடைய செக்ரட்டரியை அழைத்தது மட்டுமில்லாமல் 10 நிமிடங்கள் அந்த சடங்குகள் முடியும்வரை காத்திருந்து பின் மணமக்களை வாழ்த்தி இருக்கின்றாராம். இதனால் 'சிறந்த பண்பாளர்' என ரகுமான் முதல்வரை பற்றி பெருமையாக பல இடங்களில் கூறி வருகின்றாராம்.
Listen News!