செந்தில்-ராஜலட்சுமி இருவரும் பிரபல பாடகர்கள் ஆவார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் சாதித்த பல கலைஞர்கள் உள்ளார்கள்.
அப்படி ஒரு சூப்பர் சிங்கரில் கிராமிய பாடல்கள் மட்டுமே பாடுவோம் என்று கூறி பல கலக்கலான பாடல்கள் பாடி சாதனை புரிந்தவர்கள் தான் செந்தில்-ராஜலட்சுமி. தமிழை வளர்ப்போம், கிராமிய பாடல்களை மக்களிடம் அதிகம் கொண்டு போய் சேர்ப்போம் என பல பாடல்களை பாடியுள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல் செந்தில்-ராஜலட்சுமி அண்மையில் படு மாஸான ஒரு வீட்டை கட்டியிருந்தார்கள். இந்நிலையில் செந்தில்-ராஜலட்சுமி இருவரும் சுவிட்சர்லாந்து சென்றுள்ளனர். அங்கு இருவரும் எடுத்த புகைப்படங்களை அவர்களே தங்களது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்கள்.
Listen News!