• Apr 15 2026

நான் கடின உழைப்பாளி குழந்தைகளின் தாய் என்பதில் பெருமை கொள்கிறேன்- வனிதா போட்ட எமோஷனல் பதிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமு காணப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது 70களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின், ஒவ்வொரு சீசனிலும் டிக்கெட் டு ஃபினாலே என்கிற டாஸ்க் வைக்கப்படுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் இந்த சீசனிலும் தற்போது டிக்கெட் டூ  ஃபினாலே டாஸ்க் இன்று கடிகாரம் இல்லாமலேயே ஹவுஸ் மேட்ஸ் இரண்டு - இரண்டு பேராக பிரிந்து, நேரத்தை சரியாக கணிப்பது தான் இந்த டாஸ்க்.


 பிக்பாஸ் கேட்கும் போது அவர்கள் சரியான நேரத்தை தெரிவிக்கவேண்டும் என கூறப்படுகிறது. இந்த டாஸ்கில் மணி-ரவீனா, விஷ்ணு - நிக்சன் விக்ரம் சரவணன் - தினேஷ், பூர்ணிமா - விசித்ரா, மாயா - அனன்யா ஆகியோர் ஜோடி ஜோடியாக பிரிந்து சரியாக நேரத்தை கணிக்கின்றனர்.  

இந்த டாஸ்கில் வெற்றிபெறும் ஒருவர் நேரடியாக டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வென்று ஃபைனலுக்கு தகுதி பெறுவர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் ஜோவிதா வெளியேறினார். வீட்டை விட்டு வௌியேறிய ஜோவிதா இயக்குநர் பார்த்திபனின் உதவி இயக்குநராக சேர்ந்துள்ளார்.


இந்த நிலையில் ஜோவிதா, கடுமையாக ஸ்கிரிப் தயாரிக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வனிதா பதிவிட்டு ஜோவிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement