• May 21 2024

திமிர்ல சொல்லல, இப்போ தான் ஹீரோ ஆகிட்டேனே அதனால தான் பணம் வேணாம் என்றேன்- சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த raghava-lawrence

stella / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் கடைசியாக ருத்ரன் திரைப்படம் வெளிவந்தது.இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இதே போல் இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இப்படங்கள் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் தான் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். இவர் ஆணவத்தினால் தான் இப்படித் தெரிவித்திருந்தார் என சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் பல கிளம்பின.


இந்த நிலையில் இது குறித்த ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது நீண்ட நாட்களுக்கு முன்னர் நான் ஒரு ட்வீட் ஒன்றை வெளியிட்டு இருந்தேன். அதில் என்னுடைய ட்ரஸ்ட்டுக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம். என்னுடைய குழந்தைகளை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

நான் டான்ஸ் மாஸ்டராக இருக்கும் போது குழந்தைகளுக்கு நிறைய உதவிகளை செய்தேன். அப்போது என்னால் அவ்வளவு செய்ய முடியாது. எனக்கு பணம் தேவைப்பட்டது. அதனால் பிறரின் உதவியைக் கேட்டு இருந்தேன். ஆனால் இப்போது நான் ஹீரோ ஆகிவிட்டேன். முன்னர் 2 வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்தேன்.ஆனால் தற்போது வருடத்திற்கு 3 படங்கள் செய்கிறேன். நன்றாக பணம் வருகிறது. இப்போது எனக்குள்ளேயே ஒரு கேள்வி எழுகிறது. அது, உனக்கு நன்றாக பணம் வரும் போது நீ ஏன் மற்றவர்களிடம் பணம் வாங்கி உதவிகளைச் செய்ய வேண்டும்.. நீயே செய்யலாமே என்று.


இதன் மூலம் ஆணவமாக பணத்தை வேண்டாம் என்று நான் சொல்ல வில்லை. எனக்கு கொடுக்கிற பணத்தை உங்கள் வீட்டருகில் கஷ்டப்படுகிற குழந்தைகளுக்கு கொடுத்து உதவி செய்யுங்கள்.. உங்கள் வீட்டருகில் உள்ள ட்ரஸ்ட்டிற்கு உதவிகளை செய்யுங்கள்.

அவர்களுக்கு நிறைய பேர் கொடுக்கமாட்டார்கள். நான் எவ்வளவு சொன்னாலும், நான் உங்களுடன் சேர்ந்து உதவி செய்கிறோம் என்று சொல்கிறார்கள். அதைக்கேட்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. கஷ்டப்படுகிறவர்கள் யார் என்பதை நான் காட்டுகிறேன் அவர்களுக்கு நீங்கள் சென்று உதவி செய்யுங்கள்” என்று பேசியிருக்கிறார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement