• Sep 19 2024

'இப்போது தனிமையில் தான் இருக்கின்றேன்'- கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்த சீரியல் நடிகை ரச்சிதா

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் ரசிகர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி நிகழ்ச்சியில் கதாநாயகியாக நடித்து பிரபல்யமானவர் ரச்சிதா.

இதன் மூலம் பிரபலமான இன்னும் பல சீரியல்களில் நடித்து வந்த இவர் பிரபல சீரியல் நடிகர் தினேஷ் என்பவரைக் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இருவரும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக, இருவரும் தற்போது தனித்தனி வீட்டில் வாழ்ந்து வருவதாக ஏற்கனவே சர்ச்சை ஒன்று எழுந்தது.

இந்நிலையில், நடிகை ரசித்தா கலர்ஸ் தமிழ் சீரியலில் இது சொல்ல மறந்த கதை என்னும் சீரியல் நடித்து வருகின்றார். இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த சீரியலில் கணவனை இழந்து இரு பிள்ளைகளை தனி ஆளாக இருந்து வளர்க்கும் பெண்ணாக நடித்துள்ளார் . இந்த கதாபாத்திரமும் தனது வாழ்க்கையும் சிறிது ஒத்துப்போவதாகவும் தற்போது தனிமையில் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், இந்த கதாபாத்திரத்தில் இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் Maturity-யும் தனக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement