• Apr 27 2024

கண்ணை நம்பலாமா..? வேணாமா..? உதயநிதியின் 'கண்ணை நம்பாதே' ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு மாறனின் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ள படம் 'கண்ணை நம்பாதே'. இப்படத்தில் உதயநிதியுடன் இணைத்து ஆத்மிகா, பூமிகா சாவ்லா, பிரசன்னா, சதீஷ், சுபிக்ஷா கிருஷ்ணன் எனப் பல பிரபலங்களும் நடித்துள்ளனர்.


உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பேனரில் வெளியாகி உள்ள இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீதர் கூடுதல் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.


இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்துள்ள கண்ணை நம்பாதே படத்தை பார்த்த சினிமா ரசிகர்கள், ட்விட்டர் பக்கத்தில் பல விதமான கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.


அதாவது ஒரு சிறப்பான க்ரைம் திரில்லர் படம், இதன் திரைக்கதை இதன் மற்றொரு ப்ளஸ் ஆகும். மற்ற நடிகர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நியாமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் எனக் கூறியுள்ளனர்.


அத்தோடு ஆழமான திரைக்கதையை கொண்ட இப்படத்தில் எதிர்பாராத திருப்புமுனைகள் ஆங்காங்கே வருகிறது. நல்ல கதையை உதயநிதி தேர்வு நடித்திருக்கின்றார். துணை கதாபாத்திரங்களும் மிகவும் நன்றாக நடித்துள்ளனர் எனவும் கூறியுள்ளனர்.

இவ்வாறாக இப்படத்திற்குப் பல பொசிடிவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. 


Advertisement

Advertisement

Advertisement