• May 20 2024

தனக்கு பிடிச்சது தான் இனியா படிக்கனும் என்று கட்டாயப்படுத்தும் கோபி- கிண்டலடித்த செல்வி- அதிர்ச்சியில் உறைந்த பாக்கியா

stella / 9 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது பாக்கியா வீட்டிற்கு வரும் கோபி நான் பொண்ணு கிட்ட பேசனும் எனறு சொல்லி பேசுகின்றார். அப்போது நீ பிபிஎம் படி அது தான் உன் பியூச்சருக்கு நல்லம் என்று சொல்ல இனியா நான் அண்ணன் மாதிரி விஸ்கொம் தான் படிக்கப் போகின்றேன் என்று சொல்கின்றார். இதைக் கேட்டு கோபி அதெல்லாம் வேணாம் பிபிஎம் படி அப்போ தான் உன் லைப் செட்டில் ஆகிடும் என்கின்றார்.


இதைக் கேட்ட இனியா கோபி சென்றதும் அதிர்ச்சியில் உறைகின்றார்.பின்னர் குழப்பத்தில் நான் என்ன தான் செய்வது என்று சொல்ல பாக்கியா உனக்கு பிடிச்சதை படி டாடி சொல்லுறதுக்காக எல்லாம் நீ முடிவெடுக்காத என்கின்றார். பாக்கியாவைத் தொடர்ந்து ஜெனியும் அமிர்தாவும் கூட இனியாவிடம் உனக்கு பிடித்ததை படி என்று சொல்கின்றனர்.

தொடர்ந்து கான்டீனுக்கு வரும் பாக்கியா செல்வியிடம் இந்த விஷயத்தை சொல்ல செல்வி பேசாம நீயும் காலேஜ்ல சேர்ந்திரு அக்கா, அப்போ தான் நீயும் படிச்சிருக்கிற என்று கோபிக்கு காட்டலாம்.ஸ்டைலாக வந்திடுவ அங்கு உனக்கு பாய் பிரண்டமு் கிடைப்பாங்க என்று சொல்ல பாக்கியா என் வயசுக்கு இது ஒன்று தான் குறைச்சல். நல்லவேளை அத்தை இல்லாம போய்ட்டாங்க. அத்தை இருந்திருந்தால் என்ன பண்ணுவாங்க தெரியும் தானே என்று சொல்கின்றார்.


தொடர்ந்து வீட்டுக்கு வந்ததும் அப்ளிகேஷன் போம் வாங்கி இனியாவுக்கு பிடித்த விஸ்கோம் ஃபோமை நிரம்பிக் கொண்டிருக்க அங்கு வரும் கோபி இனியாவிடம் பிபிஎம் அப்ளிகேஷன் ஃபோம் கொடுத்து பதிய சொல்ல இனியா விஸ்கோம் தான் படிக்க போறேன் என்று சொல்ல கோபி நோடா அது படிக்க வேணாம் நீ பிபிஎம் தான் படிக்கனும் என்று கட்டாயப்படுத்துகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement