• May 19 2024

தமிழும் சரஸ்வதியும் பேசுவதை மறைந்து நின்று கேட்கும் கோதை- அர்ஜுனுக்கு காத்திருந்த அதிர்ச்சி- நடேசன் எடுத்த முடிவு

stella / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோதை சரஸ்வதியின் கடைத்திறப்பு விழாவுக்கு போனதால் வீட்டில் இருக்கிறவங்க எல்லோரும் திட்ட கோதை நான் பிளான் பண்ணி எல்லாம் போகல தற்செயலாத் தான் போனேன் என்று சொல்கின்றார். அந்த நேரம் கோதை கம்பனியில் இருந்து தமிழ் கம்பனிக்கு வேலைக்குச் சென்ற நபர் வருகின்றார்.


அவரைப் பார்த்ததும் அர்ஜுன் இவர் நமக்கு துரோகம் பண்ணிட்டு ஒடினவராச்சே இவர் ஏன் இங்க வரணும் என்று கேட்க, நடேசன் நான் பட்டறை ஆரம்பிச்ச போது இவன் தான் என்னை நம்பி வேலையில சேர்ந்தார். என் கம்பனில வேலை செய்யிறவன் மட்டுமல்ல என்னோட நண்பன் அவனை திட்டாதீங்க என்று சொல்ல கோதையும் அவரை உள்ளே அழைக்கின்றார்.

பின்னர் அவர் தாம்பூலத் தட்டுக் கொடுத்து தன்னுடைய மகளுக்கு வளைகாப்பு பங்சன் வைச்சிருக்கிறேன் கட்டாயம் நீங்க வரணும் என்று சொல்லி விட்டு போகின்றார். அப்போது அர்ஜுன் கார்த்திக்கிடம் சென்று தமிழ் சேர் கொஞ்சம் கொஞ்சமா அத்தையையும் மாமாவையும் தன்னோட பக்கம் இழுத்து வருகின்றார். கவனமா நடந்துக்கோடா என்று சொல்கின்றார். அதே போல் தமிழ் வீட்டில் சரஸ்வதி தனக்க குழந்தை இல்லாததல் வளைகாப்புக்கு வரமாட்டேன் என்று சொல்ல தமிழ் நீ வந்தே ஆகனும் என்று சொல்ல சரஸ்வதியும் சம்மதிக்கின்றார்.


தொடர்ந்து விடிந்ததும் எல்லோரும் வளைகாப்பு பங்சனில் இருக்க அர்ஜுன் அந்த வீட்டுக்காரரின் சம்மந்தியை அழைத்து சரஸ்வதிக்கு குழந்தை இல்லை என பற்ற வைக்கிறார். இதனால் சரஸ்வதி நலங்கு வைக்கிற டைம்ல அவர் வந்து சரஸ்வதியை நலங்க வைக்க வேணாம் என எச்சரிக்கின்றார்.

இதைப் பார்த்து கோபமடைந்த கோதை அந்த பொண்ணு நலங்கு வைக்கல என்றால் நானும் வைக்க மாட்டேன். எந்த காலத்தில நீங்க எல்லோரும் இருக்கிறீங்க. அந்த பொண்ணுக்கு நல்ல மனசு இருக்கு உங்க குழந்தைக்கு ஒன்றும் ஆகாது நலங்கு வைக்க சொல்லுங்க என்று சொல்ல, தமிழும் நலங்கு வைக்க சொன்னதால் சரஸ்வதி வைக்கின்றார்.


பின்னர் தமிழும் சரஸ்வதிம் கோயிலில் வந்து இருந்து தமக்கு குழந்தை இல்லையே என்று வருத்தப்படுகின்றனர். அத்தோடு கோதை தனக்காக பேசியதை நினைத்து சரஸ்வதி சந்தோஷப்படுகின்றார். அந்த நேரம் மனசு சரி இல்லை என்று கோதையும் நடேசனும் சரஸ்வதியும் தமிழும் பேசுவதைக் கேட்கின்றனர். அப்போது தமிழ் குழந்தை இல்லாமல் இருக்கிறதுக்கு நான் கூட காரணமாக இருக்கலாம் தானெ நீ யோசிக்காத என சரஸ்வதியிடம் சொல்ல கோதை கவலைப்படுகின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement