• Apr 26 2024

ராதிகா திட்டுவதை கண்டுக்காமல் போய் பாக்கியாவிடம் காபி கேட்ட கோபி- ஈஸ்வரி எடுத்த முடிவு- குஷியில் இருக்கும் இனியா

stella / 10 months ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.ஈஸ்வரி ராமமூர்த்தி மற்றும் இனியா என மூவரும் உட்கார்ந்து இருக்க அப்போது இனியா அவங்க வந்துட்டாங்களா என கேட்க ஈஸ்வரி இனிமே அவ வர மாட்டா என சொல்ல ராமமூர்த்தி உன் கிட்ட சொன்னாளா? என்று கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு அடுத்ததாக கோபி கீழே வர ஈஸ்வரி அவருக்கு காபி போட்டு கொடுத்து இனிமே உனக்கு ராதிகா வேணாம், விவாகரத்து பண்ணிடு என்று பேசிக் கொண்டிருக்க அந்த சமயம் பார்த்து ராதிகா வீட்டுக்கு வந்து விடுகிறார். இதனால் ராதிகா கோபி மற்றும் ஈஸ்வரியிடம் வாக்குவாதம் செய்ய ஈஸ்வரி நீ வந்ததால தான் அவன் வாழ்க்கை இப்படி நாசமா போச்சு என முகத்துக்கு நேராக சொல்லி அதிர்ச்சி கொள்கிறார்.


அதைத்தொடர்ந்து கோபி ராதிகாவை ரூமுக்கு அழைத்துச் செல்ல இனியா இவங்க வரமாட்டாங்க இனி சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சேன் என்று சொல்ல அவளை இந்த வீட்டை விட்டு எப்படி ஓட வைக்கறேனு பாரு, இந்த ஈஸ்வரி பத்தி இன்னும் அவளுக்கு முழுசா தெரியல என சபதம் எடுக்கிறார்.

பிறகு கோவிலுக்கு போன பாக்கியா வீட்டுக்கு வந்ததும் செல்வி வீட்டில் நடந்த விஷயங்களை சொல்ல பாக்கியா அதை எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார். கோபி சாரை திரும்பவும் உன் தலையில கட்டி வச்சுடுவாங்கன்னு நினைச்சு பயந்துட்டியா என கேட்க பாக்யா ஆமாம் எனக்கு இப்பதான் ஒரு தனித்துவமும் அடையாளமும் கிடைச்சிருக்கு. அதை எக்காரணத்தைக் கொண்டும் இழக்க விரும்பல என சொல்கிறார்.

பிறகு ரூமுக்கு போன ராதிகா கோபியிடம் வளைத்து வளைத்து சண்டை வாங்க கோபி தலை வலிக்குது கொஞ்சம் அமைதியா இரு என சொல்கிறார். அனைத்திற்கும் ராதிகா எடக்கு முடக்காக பதில் பேச கோபி வெளியே வந்து விடுகிறார்.


அதன் பிறகு கோபி தலைவலியோடு கிச்சனுக்கு வர ராமமூர்த்தி அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். கோபி அவரிடம் நீங்க என்ன வேணா திட்டுங்க ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு திட்டுங்க தலை பயங்கரமா வலிக்குது என்று சொல்லி செல்வியிடம் தைலம் கேட்டு வாங்கி தடவுகிறார்.

அதன் பிறகு பாக்கியா ராமமூர்த்தியிடம் காபி வேண்டுமா மாமா என கேட்க அவரும் குடுமா என சொல்ல பாக்கியா காபி போட்டு கொடுக்க கோபி எனக்கும் காபி போட்டு கொடு பாக்கியா ப்ளீஸ் என சொல்லி பிறகு கோபி மன்னிப்பு கேட்கிறார் இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது..


Advertisement

Advertisement

Advertisement