• Apr 26 2024

சூர்யாவைத் தொடர்ந்து ஆஸ்கார் அக்கடமிக்கு அழைக்கப்பட்ட தனுஷ் பட நடிகை- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா நடிகர் நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உரிய கெளரவத்தை முறைப்படி வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று தான் அக்கடமி அவார்ட் என்று கூறப்படுகின்ற ஆஸ்கர் விருது. 1929-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விருது விழா தற்போது உலகம் முழுவதும் எதிர்பார்க்கும் பிரமாண்டமான விருது விழாவாக மாறியிருக்கின்றது. அதாவது உலக அளவில் உற்று நோக்கப்படும் ஒரு சினிமா விருது விழாவாக இது மாறியிருக்கின்றது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வரும் நடிகர் சூர்யாவிற்கு ஆஸ்கார் அவார்ட் அக்கடமி அழைப்பு விடுத்திருந்த நிலையில் தற்போது பாலிவுட் பிரபல நடிகை ஒருவருக்கும் இந்த ஆஸ்கார் அவார்டுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது பாலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வரும் ஒரு நடிகை கஜோல் . தமிழ் சினிமாவில் 'மின்சாரக்கனவு' படத்தில் நடிகர் பிரபு தேவாக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து இருக்கின்றார். அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் நடித்த 'விஐபி 2' படத்திலும் ரீஎன்ட்ரி கொடுத்து தனது நடிப்பினால் மீண்டும் ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை அடித்துள்ளார்.

இவ்வாறாக சினிமா திரையுலகில் அசத்தி வந்த நடிகை கஜோல். 1999-ஆம் ஆண்டு பாலிவுட் அஜய் தேவை திருமணம் செய்து கொண்டார். இவர் சூரியா நடித்த 'சிங்கம்' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் கதாநாயகனாக நடித்து இருக்கின்றார். திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உண்டு. திருமணத்தைத் தொடர்ந்தும் கணவன், மனைவி என இருவருமே போட்டி போட்டு நடித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவுடன் இணைத்து பாலிவுட் நடிகையான கஜோல் க்கும் ஆஸ்கார் அக்கடமி அழைப்பு விடுத்துள்ளது. அதுமட்டுமல்லாது இவர்களுடன் இணைந்து இன்னும் 397 பேருக்கு ஆஸ்கார் அகாடமி உறுப்பினர்களாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் மிகுந்த குதூகலத்தில் உள்ளனர். அது மட்டுமல்லாது தமது சமூக வலைத்தள பக்கங்களிலும் அதிகளவில் இந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement