• Sep 19 2024

திடீரென இப்படியொரு பதிவை போட்ட திரிஷா-ஷாக்கில் ரசிகர்கள்...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


தென்னிந்தியத் திரையுலகில் அறிமுக காலத்திலிருந்து இன்றுவரை முன்னணி நட்சத்திர நாயகியாகவே வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகையே தன்னுடைய நடிப்பினால் கட்டிப் போட்டிருக்கின்றார்.

 இவர் திரைப்படங்களில் அறிமுகமாவதற்கு முன்னர் சென்னை அழகியாக 1999-ஆம் ஆண்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் வெளியாகிய படங்களாக 'சாமி, கில்லி, மௌனம் பேசியதே, அலை, நந்து, பீமா' எனப் பல படங்களையும் குறிப்பிடலாம். அதுமட்டுமன்றி பல விருதுகளையும் வென்றிருக்கின்றார்.இவர் நடிப்பில் தற்போது 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'ராங்கி' ஆகிய படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன

இவ்வாறுஇருக்கையில் எப்போது திருமணம் என்பது தான் அவரிடம் எல்லோரும் கேள்வியாக மாறி இருக்கிறது. இருப்பினும் அந்த கேள்விகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது த்ரிஷா இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் ஒரு ஸ்டேட்டஸ் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தன்னிடம் பேசுவதை நிறுத்திய நபர் பற்றி தான் அவர் இந்த பதிவை போட்டிருக்கிறார். 




Advertisement

Advertisement