• Sep 20 2024

மறைந்தாலும் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை சௌந்தர்யாவின் பிறந்தநாளை நினைவு கூறும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகிற்கு வந்த சிறிது காலத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த நடிகை தான் சௌந்தர்யா. கர்நாடகாவை சேர்ந்த இவர் கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

இருப்பினும் இவரை சிறந்த நடிகையாக்கிய திரைப்படம் என்றால் அது பொன்னுமணி தான்.இப்படத்தில் மூலம் பிரபல்யமான இவர் ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா, கமலுடன் காதலா காதலா, அர்ஜூனுடன் மன்னவரு சின்னவரு, விக்ரமுடன் கண்டேன் சீதையை, விஜயகாந்துடன் தவசி, சொக்கத்தங்கம், பார்த்திபனுடன் இவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகையாக வலம்வந்தார்.

ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக இருந்த இவர் படையப்பா படத்தில் வேலைக்காரி என்று ரம்யா கிருஷ்ணன் சொல்வதும் அதற்கு ரஜினி பதிலடி கொடுப்பதும் அவரது கேரக்டரை மேலும் அழகுப்படுத்தியது.தொடர்ந்து கண்டேன் சீதையை போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் தந்த கேரக்டர்களிலும் நடித்து பெயர் பெற்றார்.

கடந்த 2004ல் தேர்தல் பிரசாரத்திற்காக விமானத்தில் சென்ற இவர், அதுதான் தனது இறுதிப்பயணம் என்பதை அறிந்திருக்கவில்லை. அந்த விமான விபத்தில் தன்னுடைய சகோதரருடன் சேர்ந்து இவரும் பலியானார்.

தற்போது இவரது பயோ-பிக்கை எடுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த கேரக்டரில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சௌந்தர்யாவின் 50வது பிறந்தநாளையொட்டி அவரை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர். அவர் தனது 32வது வயதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement