• Sep 20 2024

50 வயசிலும் ஆண்களை மயக்கும் ரம்யா கிருஷ்ணன்... அட பார்வையாலேயே கொல்லுறாங்களே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி வாய்ந்த பெண் நட்சத்திர நாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் ரஜினி, சரத்குமார், விஜயகாந் எனப் பல நடிகர்களுடனும் இணைந்து நடித்து திரையுலகில் வெற்றிக் கொடியை நாட்டி இருக்கின்றார்.


அந்தக் காலத்தில் இவரின் நடிப்பிற்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு பல்லாயிரக்கணக்கான இளசுகளின் மனங்களைக் கொள்ளை கொண்டிருக்கின்றார் நம்ம ரம்யா கிருஷ்ணன்.


மேலும் இவர் இளம் வயதிலேயே ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் 'வெள்ளை மனசு' என்ற படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு சிவாஜி கணேசன் - ரஜினிகாந்த் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'படிக்காதவன்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் 'ஜல்லிக்கட்டு, முதல் வசந்தம், பேர் சொல்லும் பிள்ளை, வானமே எல்லை' உட்படத் தமிழில்  ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாகி, பல படங்களில் இவர் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எத்தனை படங்கள் நடித்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த 'படையப்பா' படம் தான் மீண்டும் ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழில் கம்பேக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து கமல்ஹாசனின் 'பஞ்சதந்திரம்' படத்தில் வில்லி வேடம் ஒன்றில் நடித்து பட்டையை கிளப்பியிருந்தார்.

அத்தோடு 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களில் ராஜமாதா சிவகாமியாக வலம் வந்த இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'குயின்' வெப் சீரிஸில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்து பல மக்கள் மனங்களில் குடி கொண்டார்.


இவ்வாறாக இன்றும் தன்னுடைய நடிப்புத் துறையை கைவிடாது தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்ற ரம்யா கிருஷணன் படங்களில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்ற ஒருவர். அதில் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் க்யூட்டான வீடியோக்களை பதிவேற்றி வருவார்.


அந்தவகையில் சமீபத்திலும் கறுப்பு நிறத்தில் அழகான சேலையணிந்து, ரொமான்டிக் பார்வையில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார் ரம்யா.


அதில் அவர் கொஞ்சம் கூட வயோதிபத் தோற்றம் இல்லாது ஹீரோயினாக நடிக்கும் போது எப்படி இருந்தாரோ அப்படியே அழகு குறையாமல் ஜொலிக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தமது கமெண்டுகளாலேயே அவரை ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement