• Feb 03 2026

பிரதீப் உயிருக்கு எதாச்சும் ஆனா..? போர்க்கொடித் தூக்கும் ஷகிலா! வலுக்கும் கண்டனங்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.பிரதீப்பிற்கு ரெட் காட் கொடுக்கப்பட்ட விஷயம் தான் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் சோஷியல் மீடியாக்களில் பேசு பொருளாக மாறியுள்ளது

இந்த நிலையில், பிரதீப்பின் ரெட் கார்ட் விவகாரம் தொடர்பில் ஷகிலாவும் மனம் திறந்து பேசியுள்ளார்.


இது குறித்து மேலும் அவர் கூறுகையில், தூக்கு தண்டனை கைதிக்க கூட கடைசி நேரத்துல என்ன ஆசை என்று கேட்பாங்க. ஆனா இவ்வளவு பெரிய ஷோல இருந்து இவ்ளோ பெரிய குற்றச்சாட்டோட வெளிவந்த பிரதீப்க்கு அவர் தரப்பு நியாயத்தை சொல்றதுக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கல.இதுல கமல் சார திட்டி ஒரு பிரயோஜனம் இல்ல, இந்த ஷோவ நடத்துறவங்களை தான் சொல்லணும். இந்த மாதிரி ஒரு அசிங்கத்தோட அவமானப்பட்டு நான் வெளியில வந்து இருந்தேன்னா நான் கண்டிப்பா தூக்கில் தொங்கி இருப்பேன்.


அந்தப் பையன் ஆல்ரெடி டிஸ்டர்ப்டு ஆன பையன் வேற ஏதாச்சு தப்பான முடிவு எடுத்துட்டா கவின் ஒரு போஸ்ட்டு போட்டு இருந்தாரு, 'உன் கூட இருக்கிறவங்களுக்கு உன்னை தெரிஞ்சவங்களுக்கும் உன்னை பத்தி தெரியும் மக்கள் சப்போர்ட் உனக்கு இருக்கும்' அப்படின்னு சொல்லி இருக்காரு என்று பிரதீப்க்கு ஆதரவாக ஷகீலா போர்க்கொடி தூக்கியுள்ளார்.

Advertisement

Advertisement