• Sep 20 2024

சேரி மக்கள் குறித்த சர்ச்சை பேச்சு: கண்கலங்கி கையெடுத்து கும்பிட்ட பிரிகிடா.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமான இரவின் நிழலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் பிரிகிடா. ஆஹா கல்யாணம் வெப்சீரிஸில் 'பவி டீச்சர்' கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இவர் ‘இரவின் நிழல்’ படம் குறித்த பிரிகிடாவின் சமீபத்திய பேச்சு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ஆஹா கல்யாணம் என்கிற தொடரில் பவி டீச்சராக நடித்த பிரிகிடாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் உள்ளனர். மேலும் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிய சென்ற இவருக்கு கதாநாயகியின் ரோலையே வழங்கி இருக்கிறார் பார்த்திபன்.

அண்மையில் வெளியான இந்தப்படத்தில் பிரிகிடாவின் நடிப்பை பலரும் பாராட்டி வரும் நிலையில் அவரின் சமீபத்திய பேச்சு பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

அண்மையில் பிரிகிடா பத்திரிக்கையாளர்கள் மத்தியில், “இந்தக் கதையே தனி ஒருவன் பற்றியதுதான். அவனது வாழ்க்கையில் கெட்டது மட்டும்தான் நடந்திருக்கிறது. அதை ராவாகத்தான் சொல்ல முடியும். இப்போ ஒரு சேரிக்கு போனோமென்றால் நாம் கெட்ட வார்த்தைகளை மட்டும்தான் கேட்க முடியும். சினிமாவுக்காக ஏமாத்த முடியாது” என்று குறிப்பிட்டார்.. அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இதனையடுத்து பிரிகிடா தனது ட்விட்டர் பக்கத்தில் "இடத்தை பொறுத்து மொழி மாறும் என்பதை தான் கூற வந்தேன்.." என குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரிகிதா, ''நான் அப்படி சொன்னதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய தொடக்கம்.

“இரவின் நிழல் படத்தின் மகிழ்ச்சியை இரண்டு நாள் கூட என்னால் சந்தோஷமாக கொண்டாட முடியவில்லை.மேலும் நான் அந்தப் பேட்டியில் ஒவ்வொரு ஊரிலும் எப்படி பேசுவார்கள் என்பதைத் தான் சொல்ல முயன்றேன். ஆனால், அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதை எண்ணி நான் மிகவும் மனம் வருந்துகிறேன். முழுமையாக உடைந்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள். நன்றி'' எனக்கூறி கண் கலங்கி கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement