சமீபத்தில் நடந்து முடிந்துள்ள பிக்போஸ் சீசனில் கலந்து கொண்ட அருண் 98 நாட்கள் மிகவும் அருமையாக விளையாடி வெளியேறினார்.இவர் மற்றும் கடந்த சீசன் அர்ச்சனா இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர்.இருவீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ள இந்த ஜோடியினை அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் நேர்காணல் செய்பவர் உங்களது கனவு திருமணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு அருண் "நாங்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் north site இருக்கும் ஒரு சிவன் கோவிலில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதே எனது கனவு" என கூறியுள்ளார்.மற்றும் எனக்கு பெண் குழந்தைகளில் மிகவும் விருப்பம் எங்களுக்கு குழந்தை கிடைத்தால் "ஆரா " என பெயர் வைப்போம் எனவும் கூறியுள்ளனர்.
இவ்வாறான நேர்காணல் செய்பவரின் கேள்விக்கு மிகவும் சூப்பராக பதிலளித்த அருண் திடீரென நீங்கள் இருவரும் இவ்வளவு understanding ஆக இருக்கீங்க அப்போ உங்க ரெண்டு பேருக்கும் திருமணம் முடிந்து விட்டதா என கேட்டபோது அருண் உடனே ஓம் என தலையாட்டி பின் மழுப்பலாக பதிலளித்துள்ளார். அது மட்டுமல்லாமல் குறித்த நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் அவர்களுக்கு மாலை மாத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
Listen News!