• May 10 2024

அடி மேல் அடி வாங்கும் இயக்குநர் ஷங்கர்…பட ஷூட்டிங் இடையில் நின்று போகும் அபாயம்!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி வகிக்கும் இயக்குநர்களில் முக்கியமானவராக விளங்குபவர் இயக்குநர் ஷங்கர். பிரம்மண்டமான முறையில் அதிக பொருட் செலவில் படங்களைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாது படத்திற்கு தேர்வு செய்யும் கதை, கதாபாத்திங்கள், கதை அமையும் இடம் வரை அனைத்தையும் பெரியளவில் செய்வார்.

அதுமட்டுமல்லாது சிறப்பாக திரைப்படங்களைத் தயாரிப்பதில் திறமை வாய்ந்த ஒருவராக விளங்குகின்றார். மேலும் இவர் 'எஸ் பிக்சர்ஸ்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இயக்குநராக இவர் இயற்றிய படங்களாக 'ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன்' உட்படப் பல படங்களைக் குறிப்பிடலாம்.

சிறந்த திரைப் படங்களை இயக்கியமைக்காக இவருக்குப் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு தனது கதைக்களத்தாலேயே ரசிகர்களை கதிரையின் நுனியில் இருந்து படம் பார்க்கும் அளவிற்கு மாற்றி இருக்கின்றார். அந்த அளவிற்கு விறுவிறுப்பான படங்கள் பலவற்றை கொடுத்து வருகின்றார்.

இவ்வாறு பல படங்களையும் இயற்றி வரும் இவர் தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படம் இயக்கி வருகின்றார். மிக அதிக பொருள் செலவில் உருவாகும் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆந்திராவில் வரும் 1-ஆம் திகதி முதல் மொத்த சினிமா ஷூட்டிங் ஸ்ட்ரைக் காரணமாக நிறுத்தப்படுகிறது. இதனால் பட ஷூட்டிங்கைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது தமிழில் அவர் இயக்கிக் கொண்டிருந்த இந்தியன் 2 திரைப்படமும் சில காரணங்களால் நின்று போனது. இதனால் அதிக மன உளைச்சலிற்கு ஆளானார் ஷங்கர். தற்போது ராம் சரணன் நடிக்கும் இத் திரைப்படத்தின் ஷூட்டிங்கும் இடையில் நின்று போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இவர் மன வேதனைக்குள் மீண்டும் ஆளாகியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement